December 6, 2025, 4:30 AM
24.9 C
Chennai

‘மூக்குத்தி அம்மன்’ படத் தயாரிப்பாளரை TTD ஆலோசனைக் கமிட்டியில் இருந்து நீக்க கோரிக்கை!

mukkuthi amman
mukkuthi amman

மூக்குத்தி அம்மன் படத்தயாரிப்பாளர் “ஐசரி கணேசன்” என்பவரை திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி கேட்டுக் கொண்டிருக்கிறது.

இது குறித்து அந்தக் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கை:

திருப்பதி பெருமாள் மலை குறித்தும்,இந்து மத கடவுள்பக்தி குறித்து அவதூறாக படமெடுத்த “மூக்குத்தி அம்மன்” திரைப்பட காட்சிகளை நீக்க வேண்டும் படக்குழுவினர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழர் கட்சி கோரிக்கை!!

கோடான கோடி இந்துக்களின் குலதெய்வமாக,
இஷ்டதெய்வமாக விளங்கி கொண்டிருப்பது திருப்பதி வெங்கடாஜலபதி மற்றும் பழனி மலை முருகன்.

லட்சக்கணக்கான மக்கள் விரதமிருந்து பாதயாத்திரையாக வந்து முடி காணிக்கை செலுத்தி, தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொண்டு வருவது காலம் காலமாக நடந்து கொண்டு வரும் நடைமுறை.

சென்னையிலிருந்து செல்லும் திருப்பதி திருக்குடை தரிசனம் செய்வதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா’ “கோவிந்தா” என்ற முழக்கம் செய்வது பக்தி உணர்வினால் தான்.

திருப்பதியில் கொடுக்கக் கூடிய லட்டு பிரசாதத்தால் அல்ல.
ஆழ்வார்கள் பாடினார்கள் என்றால் பெருமாள் மீது கொண்டிருந்த பக்தியின் பொருட்டு தான் பாசுரங்கள் பாடினார்கள்.

திரைப்படத்துறையில்” கலை சுதந்திரம்”
கருத்து சுதந்திரம் என்பதற்காக ஒரு குறிப்பிட்ட இந்துமத பிரிவினரை மட்டும் கொச்சைப்படுத்தியும் அவர்களின் பக்தியை கிண்டல் செய்தல், திருத்தலங்கள் மீதான நம்பிக்கையை சிதைக்கக் கூடிய வேலைகளில் நடிகர் ஆர்ஜே பாலாஜி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் இந்து மத நம்பிக்கைகளை மட்டும் கொச்சைப்படுத்துகிறது.

இந்துமத சாமியார்களும் வில்லன்கள் போலவும் காட்சிப்படுத்துகிறது. இந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை தயாரித்தவர் திரு ஐசரி கணேசன் என்பவர். இவர் திருப்பதிதேவஸ்தானம் ஆலோசனை கமிட்டி உறுப்பினராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.

திருப்பதி பெருமாள் மீது நம்பிக்கை இல்லாது லட்டு கொடுப்பதால் கூட்டம் வருகிறது பழனி பஞ்சாமிர்தம் கொடுப்பதால் கூட்டம் வருகிறது என்று கொச்சைப்படுத்த கூடிய ஐசரி கணேசன் என்பவரை ஆலோசனை குழு உறுப்பினராக வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்?

இஸ்லாம் கிறிஸ்தவ மத நம்பிக்கைகளை கடவுள் வேடம் பூண்டு, அந்த மத கடவுள்கள் பேசுவதுபோல, அல்லது மசூதி சர்ச்சுகளுக்கு கூட்டம் வருகிறது என்றால், அங்கெல்லாம் எப்படி கூட்டம் வருகிறார்கள். அங்கே மதுபானங்கள் கொடுக்கிறார்கள் அதனால் கூட்டம் வருகிறது. இது குறித்த எந்த காட்சி வடிவமைப்பும் இல்லை.

சமீபத்தில் கேரளாவில் பிடிபட்ட பாதிரியார் கணக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பிடிபட்டது ஐசரி கணேசன் கண்ணுக்கு தெரியவில்லையோ என்னவோ!

இந்து மத நம்பிக்கைகளை உடைத்து திருத்தலங்கள் மீதான நம்பிக்கைகளை சிதைப்பது, பக்தியை கேலி கிண்டல் செய்து கொச்சைப்படுத்துவது போன்றவையெல்லாம் கலைத்துறையில் திட்டமிட்ட செயல் வடிவமாகவே நடைபெறுகிறது என்று பார்க்கிறோம்.

ஆகவே திருப்பதி பெருமாள் கோவில் குறித்தும் திருப்பதி பெருமாளை வணங்க கூடிய பக்தர்கள் பக்தியை கொச்சைப்படுத்தி படமெடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேசன் என்பவரை திருப்பதி தேவஸ்தான ஆலோசனை கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாது நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிகை நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுத்திட புகார் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்து தமிழர் கட்சியின் சார்பில் முன் வைக்கிறோம்.

சர்ச்சைக்குரிய இந்துமத கடவுள் பக்தி காட்சிகள் நீக்கப்பட வேண்டும் இல்லையெனில் தசாவதாரம் பிரச்சனை வந்தபோது முஸ்லீம் இயக்கங்கள் என்ன நிலையை கையாண்டார்களோ அதே சூழ்நிலை எதிர்காலத்தில் திரைத் துறையினருக்கு
இந்துக்களால் ஏற்படக்கூடிய சூழ்நிலையை இதுபோன்ற படக்குழுவினரே உருவாக்குகிறார்கள்.

தயாரிப்பாளர் ஐசரி கணேசன் ஆர் ஜே பாலாஜி நடிகை நயன்தாரா மற்றும் படக்குழுவினர் இந்துக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லையெனில் பக்தர்களை திரட்டி போராட்டங்களை முன்னெடுக்க கூடிய சூழ்நிலை உருவாக்கிட வேண்டாமென்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் எச்சரிக்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories