நிவார் புயல்… தமிழக, புதுவை முதல்வர்களிடம் பிரதமர் மோடி பேச்சு!

pmmodiji
pmmodiji

தமிழகம், புதுவையை நோக்கி, நிவார் புயல் வேகம் அதிகரித்துள்ள நிலையில், ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. மேலும், அடையாறு ஆற்றங்கரையோரம் அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நிவார் புயலால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில முதல்வர்களுடன் பேசியதாகவும், தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு நிச்சயம் செய்யும் என்றும் பிரதமர் மோடி டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவார் புயல், மாமல்லபுரத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையே நாளை (நவ.25) கரையைக் கடக்க உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதை அடுத்து, இந்தப் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஒரு வாரத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களை இருப்பு வைக்கவும், மருந்து மாத்திரைகளை கைவசம் வைத்துக் கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏழு மாவட்டங்களுக்கு இன்று மதியம் முதல் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட உள்ளது.

புயல் தொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், நிவார் புயல் சூழ்நிலை குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் தொலைபேசியில் பேசினேன். தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என உறுதியளித்தேன். பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக வேண்டிக் கொள்கிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார்./

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories