December 6, 2025, 5:16 AM
24.9 C
Chennai

நிவார் புயல்… தமிழக, புதுவை முதல்வர்களிடம் பிரதமர் மோடி பேச்சு!

pmmodiji
pmmodiji

தமிழகம், புதுவையை நோக்கி, நிவார் புயல் வேகம் அதிகரித்துள்ள நிலையில், ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. மேலும், அடையாறு ஆற்றங்கரையோரம் அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நிவார் புயலால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில முதல்வர்களுடன் பேசியதாகவும், தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு நிச்சயம் செய்யும் என்றும் பிரதமர் மோடி டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவார் புயல், மாமல்லபுரத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையே நாளை (நவ.25) கரையைக் கடக்க உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதை அடுத்து, இந்தப் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஒரு வாரத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களை இருப்பு வைக்கவும், மருந்து மாத்திரைகளை கைவசம் வைத்துக் கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏழு மாவட்டங்களுக்கு இன்று மதியம் முதல் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட உள்ளது.

புயல் தொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், நிவார் புயல் சூழ்நிலை குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் தொலைபேசியில் பேசினேன். தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என உறுதியளித்தேன். பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக வேண்டிக் கொள்கிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார்./

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories