பெரியபாண்டியன் சுடப்பட்ட விவகாரத்தில் திருப்பம்: ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தானில் வழக்கு பதிவு

சென்னை :

சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலைப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்ட ராஜஸ்தான் போலீசார், அதே குழுவில் உடன் சென்ற ஆய்வாளர் முனிசேகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற போது, சென்னை மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவருடன் சென்ற மற்ற காவலர்களும் காயமடைந்தனர்.

இந்நிலையில் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் போலீசார் முதல்கட்ட விசாரணை நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதில், பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தது ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கில் இருந்த குண்டு என்றும், முனிசேகரின் துப்பாக்கியால் தான் பெரியபாண்டியன் சுடப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து முதலில் ராஜஸ்தான் போலீஸாரிடம் புகார் அளித்த ஆய்வாளர் முனிசேகர், தனது புகாரில், ‘நானும் பெரியபாண்டியனும் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற இடத்தில் அவர்கள் கம்பிகள் கட்டைகளால் எங்களைத் தாக்கினார்கள். அப்போது நான் நிலைதடுமாறி விழுந்தேன். என் கையிலிருந்த துப்பாக்கி கீழே விழுந்தது. அதனை பெரியபாண்டியன் தான் எடுத்தார். எங்களுடன் வந்த சக காவலர்கள் உதவியுடன் நாங்கள் வெளியே வந்தோம். ஆனால், எதிர்பாராத விதமாக பெரியபாண்டியன் உள்ளே கொள்ளையர்களிடம் மாட்டிக் கொண்டார். அவர் கொள்ளையரால் சுடப்பட்டார். துப்பாக்கி சத்தம் கேட்டதும் நாங்கள் உள்ளே சென்றோம். அப்போது பெரியபாண்டியன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கே அவர் உயிரிழந்து விட்டதாகக் கூறினார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ராஜஸ்தான் போலீஸார் பெரியபாண்டியன் மீது பாய்ந்த குண்டு முனிசேகரின் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு என்று கூறியுள்ளனர்.

இரு தரப்பிலும் கொடுக்கப்பட்ட தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளதால், காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலும் ஒரு திடீர் திருப்பமாக சென்னை கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்தரன் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற போது அஜாக்ரதையாக செயல்பட்டு பெரியபாண்டியன் உயிர் பிரியக் காரணமாக இருந்ததாக முனிசேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முனிசேகர் தவறுதலாக சுட்டதாலேயே பெரியபாண்டியன் உயிரிழந்ததாக ராஜஸ்தான் போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய முரண்பட்ட தகவல்களால், இந்த விவகாரத்தில் மர்மம் நீடிக்கிறது. உண்மை என்ன என்பதை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று காவல் துறை மட்டத்தில் பேச்சு எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories