December 6, 2025, 10:10 AM
26.8 C
Chennai

ஓரினச்சேர்க்கையில் ஏற்பட்ட தகராறு! உடனிருந்த இளைஞனைக் கொன்ற இளைஞன்!

murder-2-1
murder-2-1

ஓரினச்சேர்க்கையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில இளைஞர் ஒருவரை அடித்துக் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள நொச்சிபாளையம் பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது.

இது தொடர்பாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையில் அந்த ஆண் சடலம், அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

மேலும், இறந்தவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரவீந்திரதாஸ் என்றும் அவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ரவீந்திர தாஸின் செல்போன் போலீசாரின் பிடியில் சிக்கியது. அதில், அவர் கடைசியாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி சேர்ந்த சுபாஷ்(20) என்ற இளைஞரிடம் பேசியதும் ரவீந்திரதாஸ் உடன் சுபாஷ் பணியாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் சுபாஷை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, கடந்த ஒரு ஆண்டாக ரவீந்திரதாஸ் உடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகவும் நொச்சிபாளையம் பகுதியில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு இருந்த போது ஏற்பட்ட தகராறில் ரவீந்திரதாஸ் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் சுபாஷ் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து, சுபாஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories