February 22, 2026, 3:05 PM
30.4 C
Chennai

வளர்ப்பு தந்தையே மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை! 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

vankodumai
vankodumai

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். முதல் மனைவி பிரிந்து சென்றதால் கெளவுசல்யா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இதனிடையே, கணவனை இழந்த கௌசல்யாவின் சகோதரி சுந்தரியும், முருகேசனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இதனால், சுந்தரி மற்றும் அவரது 13 வயது மகள் என அனைவரும் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த தீபாவளி அன்று சிறுமியின் தாய் மற்றும் சித்தி வெளியே சென்றுவிட்டதால், வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற முருகேசன் சிறுமி தனியாக இருப்பதைக் கண்டு, அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி குழந்தையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததார்

அத்துடன், இதனை வெளியில் சொன்னால் உன்னையும், உனது தாயையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். அதனால் அச்சமடைந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமையை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். சிறுமியின் பயத்தை பயன்படுத்திக் கொண்ட முருகேசன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தொடர்ந்து சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார்.

இதனால் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சோற்வுற்று காணப்பட்டதால், சந்தேகமடைந்த தாய் சுந்தரி சிறுமியிடம் விசாரித்திருக்கிறார். அப்போதும் சிறுமி பயந்துகொண்டு தனக்கு நடந்த அநீதியை தாயிடம் சொல்லாமல் மழுப்பியிருக்கிறார்.

ஆனால் சிறுமியின் தாய் தொடர்ந்து கேட்டதால் அவர் தனக்கு நடந்த கொடுமையை அழுதுக்கொண்டே கூறியிருக்கிறார். அதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன சுந்தரி, என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தப்பிச் செல்ல முடிவெடுத்து, குழந்தையுடன் பெருந்துறை பேருந்து நிலையத்திற்கு சென்றார்.

வீட்டில் இருவரும் இல்லாததால், அதிர்ச்சியடைந்த முருகேசன், அவர்களை தேடி பெருந்துறை பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு சுந்தரியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்த முருகேசன், நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால், அச்சமடைந்த சுந்தரி, பெருந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போக்சோ, கொலைமிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்தனர். முருகேசனை கைது செய்த காவல்துறையினர், ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories