போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த எதிரொலியாக ஆட்டோக்களில் அடாவடி வசூல் நடக்கிறது.
காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோயம்பேடு வணிக வளாகத்திற்கு பேருந்துகள் இயங்காத காரணத்தால் வியாபாரிகள், பொதுமக்கள் வருகையின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது; போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
பெரும்பாலான ஓட்டுநர்கள் பணிக்கு வராததால் கோவை போக்குவரத்து பணிமனையில் இருந்து 20% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.


