December 5, 2025, 10:31 PM
26.6 C
Chennai

தனித்திருந்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு! ஒத்த ஆளா திருடனை மடக்கிய பெண்!

sharmila-1
sharmila-1

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பட்டாபி சீதாராமன் தெருவில் வசித்து வருபவர் ஹரிகிருஷ்ணன். இவரது வீட்டில் சம்பவத்தன்று அவரின் மனைவி சர்மிளா மட்டும் இருந்துள்ளார். வீட்டின் கதவு திறந்திருந்த நிலையில், வேட்டி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் போதையில் தள்ளாடி வந்துள்ளான்.

அங்கு, தனியாக இருந்த ஹரி கிருஷ்ணனின் மனைவியிடம் உடைந்த பாட்டிலை காட்டி, குத்தி விடுவதாக மிரட்டி தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளான். இதனையடுத்து சர்மிளா திருடன்.. திருடன்.., என்று கூச்சலிட்டபடி ஓடவிடாமல் பிடித்துள்ளார்.

இதில், ஒரு சமயத்தில் இருவரும் கீழே விழுந்துவிடவே, கீழே விழுந்த கொள்ளையன் லாரிக்கு அடியில் மாட்டிய எலி போல அகப்பட்டுள்ளான். இதன்பின்னர், அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்ற நிலையில், அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி வழியாக வந்த மாதவன் என்பவர் திருடனை மடக்கிப் பிடித்த நிலையில், அவரது வேட்டியை அவிழ்த்து விட்டு தப்பி ஓடியுள்ளான்.

பின்னர் தலைதெறிக்க ஓடிய வேகத்தில், எதிரே இருந்த சுவற்றை பார்க்காமல் மோதி மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளான். அக்கம் பக்கத்தினர் இதற்குள்ளாக சத்தம் கேட்டு சுதாரிக்கவே, அனைவரும் மொத்தமாக வந்து அடித்து நொறுக்கி, பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Thiru-muurugan
Thiru-muurugan

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கொள்ளையனின் பரிதாப நிலையை பார்த்து அவசர உதவிக்கு தகவல் தெரிவித்த நிலையில், நையப்புடைத்ததில் வலி தாங்க இயலாமல் வளைந்து நெளிந்த அவசர ஊர்தியில் ஏறி படுத்துக்கொண்டான். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவிட்டு, காவல் நிலையத்திற்கு கூட்டி வந்து விசாரணை செய்துள்ளனர்.

இதுகுறித்த விசாரணையில், அங்குள்ள கொழுந்துறை கிராமத்தை சேர்ந்த திருமுருகன் என்பதும், துபாயில் கொத்தனாராக வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னதாக ஊர் திரும்பி தற்போது கட்டிட வேலைக்கு செல்வதும் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று மது அருந்தியதால், திறந்து கிடந்த வீட்டிற்குள் சென்று சங்கிலி பறிக்க முயன்றது தெரிய வந்துள்ளது. மேலும், பெண்கள் தனியாக இருக்கும் பட்சத்தில், வீட்டின் வாயில் கதவுகளை பூட்டி வைக்க வேண்டும் என்றும் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories