பூங்காவிற்கு விளையாடச் சென்ற சிறுவன்! நேர்ந்த விபரீதம்!

gowtham - 2026

பூங்காவில் விளையாட சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது .

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த சக்தி நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் 45 வயதுடைய வரதன் மனைவி 32 வயதுடைய நிஷா மற்றும் இரண்டு மகன்கள் இப்பகுதியில் குடியிருந்தனர்.

தந்தை வரதன் கூலித் தொழில் செய்து வருபவர். மூத்த மகனான 8 வயது கௌதம் நேற்று மதிய வேளையில் வீட்டிற்கு அருகிலுள்ள பீர்க்கன்காரணை பேரூராட்சி பூங்காவிற்கு விளையாடச் சென்றுள்ளான்.

விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்கிருந்த மின்விளக்கின் , மின்கம்பியானது வெளியே தொங்கும் நிலையில் இருந்தது. இந்த மின் கம்பி விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது உரசி அதிலிருந்து மின்சாரம் சிறுவன் மீது பாய்ந்து சம்பவ இடத்திலேயே சிறுவன் இறந்தான்.

வெகு நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் பூங்காவிற்கு சென்ற தாய், மகன் மின்சார கம்பியை பிடித்தவாறு கீழே விழுந்து இருப்பதைக்கண்டு அலறி உள்ளார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

அவரின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் சிறுவனை அங்கு உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவன் கவுதமை பரிசோதித்தபோது, அவன் இறந்து வெகு நேரமாகிவிட்டது, என்று மருத்துவர்கள் கூறினர்.

அதனால் சிறுவனின் உறவினர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆகியோர் ஆத்திரமடைந்து, சிறுவன் இறந்ததற்கு காரணமான பீர்க்கன்காரணை பேரூராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தாம்பரம் -முடிச்சூர் பகுதி பிரதான சாலையில் உள்ள கிருஷ்ணா நகரில், சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின் ராஜ் மற்றும் பணி புரியும் போலீசார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இறப்பிற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் எடுத்துரைத்து கூட்டத்தை கலைத்தனர்.

பின் சிறுவனின் உடலை கைப்பற்றி பீர்க்கன்காரணை போலீசார் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories