December 6, 2025, 5:03 AM
24.9 C
Chennai

கிரெடிட் கார்டு ஓடிபி கூறி பறிபோன பணம்! தாமதிக்காது போலீஸை அணுகி மீண்ட சம்பவம்!

cellphone speech - 2025

கிரெடிட் கார்டு’ காலாவதியாகி விட்டதாக பேசிய நபரிடம், ஓ.டி.பி., மோசடியில் பறிகொடுத்த, 96 ஆயிரம் ரூபாயை, ஒரே நாளில், போலீசார் மீட்டுக் கொடுத்தனர்.

தரமணியைச் சேர்ந்தவர் ஜாய், 40. கடந்த ஆண்டு, எஸ்.பி.ஐ., வங்கி ‘கிரெடிட் கார்டு’ வாங்கினார். சில மாதம் பயன்படுத்தாமல் இருந்தார். அதிர்ச்சி இரு தினங்களுக்கு முன், இவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ‘கஸ்டமர் கேரில்’ இருந்து பேசுவதாக கூறி உள்ளார்.

தொடர்ந்து, ‘கிரெடிட் கார்டு காலாவதியாகி விட்டதால், புதுப்பிக்க வேண்டும். இதற்கு, கார்டு மற்றும் ஓ.டி.பி., எண்களை கூற வேண்டும்’ என, கேட்டுள்ளார். இதை நம்பிய, ஜாய், மர்ம நபர் கூறியதை போல், ஓ.டி.பி., எண் கூறி உள்ளார்.

சில நொடியில், அவரது வங்கி கணக்கில் இருந்து, 96 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது கண்டு, அதிர்ச்சி அடைந்தார். வங்கியில் முறையிட்ட போது, ‘ஓ.டி.பி., எண் கூறியதால், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது’ என, கூறி உள்ளனர்.

credit card debit card - 2025

பின், அடையாறு காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்தார்.’சைபர் கிரைம்’ போலீசார் விசாரணையில், மர்ம நபர், வட மாநிலத்தில் இருந்து பேசியது தெரிந்தது. எந்த, ‘வாலட் ஆப்பில்’ பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது என, புலனாய்வு செய்த போலீசார், இரண்டு மணி நேரத்தில், பணத்தை, ஜாய் வங்கி கணக்கில் திருப்பி செலுத்த நடவடிக்கை எடுத்தனர். ஒரே நாளில், பணத்தை மீட்டுக் கொடுத்த போலீசாருக்கு, ஜாய் நன்றி தெரிவித்தார்.

மோசடி நபர்கள், நேரடியாக, அவர்கள் வங்கி கணக்கில், பணத்தை பரிமாற்றம் செய்யமாட்டார்கள். பொருட்கள் வாங்கியதாக கணக்கு காட்டி, வாலட் சேவை வழியாக, பணத்தை மாற்றி, பின், அவர்கள் வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்வர்.

ஏமார்ந்த நாள் அல்லது மறுநாள், பணத்தை மீட்பது எளிது. மோசடி நபர்கள், வங்கி கணக்கில் பணம் சென்றால், மீட்பது கடினம். பண பரிவர்த்தனை அட்டை தொடர்பாக, தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு பேசினால், பதில் கூற வேண்டாம். உரிய வங்கிக்கு சென்று, சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, போலீசார் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories