February 22, 2026, 4:00 AM
25.6 C
Chennai

கிரெடிட் கார்டு ஓடிபி கூறி பறிபோன பணம்! தாமதிக்காது போலீஸை அணுகி மீண்ட சம்பவம்!

cellphone speech - 2026

கிரெடிட் கார்டு’ காலாவதியாகி விட்டதாக பேசிய நபரிடம், ஓ.டி.பி., மோசடியில் பறிகொடுத்த, 96 ஆயிரம் ரூபாயை, ஒரே நாளில், போலீசார் மீட்டுக் கொடுத்தனர்.

தரமணியைச் சேர்ந்தவர் ஜாய், 40. கடந்த ஆண்டு, எஸ்.பி.ஐ., வங்கி ‘கிரெடிட் கார்டு’ வாங்கினார். சில மாதம் பயன்படுத்தாமல் இருந்தார். அதிர்ச்சி இரு தினங்களுக்கு முன், இவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ‘கஸ்டமர் கேரில்’ இருந்து பேசுவதாக கூறி உள்ளார்.

தொடர்ந்து, ‘கிரெடிட் கார்டு காலாவதியாகி விட்டதால், புதுப்பிக்க வேண்டும். இதற்கு, கார்டு மற்றும் ஓ.டி.பி., எண்களை கூற வேண்டும்’ என, கேட்டுள்ளார். இதை நம்பிய, ஜாய், மர்ம நபர் கூறியதை போல், ஓ.டி.பி., எண் கூறி உள்ளார்.

சில நொடியில், அவரது வங்கி கணக்கில் இருந்து, 96 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது கண்டு, அதிர்ச்சி அடைந்தார். வங்கியில் முறையிட்ட போது, ‘ஓ.டி.பி., எண் கூறியதால், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது’ என, கூறி உள்ளனர்.

credit card debit card - 2026

பின், அடையாறு காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்தார்.’சைபர் கிரைம்’ போலீசார் விசாரணையில், மர்ம நபர், வட மாநிலத்தில் இருந்து பேசியது தெரிந்தது. எந்த, ‘வாலட் ஆப்பில்’ பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது என, புலனாய்வு செய்த போலீசார், இரண்டு மணி நேரத்தில், பணத்தை, ஜாய் வங்கி கணக்கில் திருப்பி செலுத்த நடவடிக்கை எடுத்தனர். ஒரே நாளில், பணத்தை மீட்டுக் கொடுத்த போலீசாருக்கு, ஜாய் நன்றி தெரிவித்தார்.

மோசடி நபர்கள், நேரடியாக, அவர்கள் வங்கி கணக்கில், பணத்தை பரிமாற்றம் செய்யமாட்டார்கள். பொருட்கள் வாங்கியதாக கணக்கு காட்டி, வாலட் சேவை வழியாக, பணத்தை மாற்றி, பின், அவர்கள் வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்வர்.

ஏமார்ந்த நாள் அல்லது மறுநாள், பணத்தை மீட்பது எளிது. மோசடி நபர்கள், வங்கி கணக்கில் பணம் சென்றால், மீட்பது கடினம். பண பரிவர்த்தனை அட்டை தொடர்பாக, தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு பேசினால், பதில் கூற வேண்டாம். உரிய வங்கிக்கு சென்று, சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, போலீசார் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories