December 5, 2025, 9:52 AM
26.3 C
Chennai

மதுரை தல்லாகுளம் பகுதியில் வாக்காளருக்கு பண விநியோகம் செய்தபோது… பறிமுதல்!

crime scene - 2025
crime-imgae

மதுரை தல்லாகுளம் பகுதியில் வாக்காளருக்கு பணம் விநியோகம் செய்தபோது பறிமுதல்!

மதுரை ஏப்ரல்3 தல்லாகுளம் பகுதியில் வாக்காளருக்கு பணம் விநியோகம் செய்தவரிடம்இருந்து போலீசார் பணம் பறிமுதல் செய்தனர்.

தல்லாகுளம் விசாலாட்சிபுரம் காலாங்கரை பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து பறக்கும் படை அதிகாரி மைதீன் பாட்சா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர்‌

அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் 62 என்பவரிடமிருந்து வாக்காளர் பட்டியலும் பணம் ரூபாய் 20 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தல்லாகுளம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


குடும்ப பிரச்னை காரணமாக கணவர் தூக்குப் போட்டு தற்கொலை!போலீஸ் விசாரணை!

மதுரை: குடும்ப பிரச்சனை காரணமாக மனமுடைந்த கணவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .

மதுரைசொக்கிகுளம் அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில் வேல் 40. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த செந்தில்வேல் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் தொடர்பாக மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில்தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரை கே.புதூரில் நூதன மோசடி நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்க நகை அபேஸ்! மர்ம நபர்கள் கைவரிசை!

மதுரை: கே.புதூர்பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்க நகையை நூதனமாக ஏமாற்றிபறத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கே.புதூர்கற்பகநகர்நான்காவதுதெருவை சேர்ந்தவர் கண்ணன் 46.இவரதுதாய் கற்பகநகர் ஆறாவது தெரு சந்திப்பில் நடந்து சென்றபோது 3 மர்ம நபர்கள் அவருக்கு நன்மை செய்வது போல் நடித்தனர். அவர் அணிந்து இருந்த 7 பவுன் நகையை வாங்கி பேப்பரில் மடித்து பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தனர்.

பின்னர் அந்தப் பெண் வீட்டிற்குசென்று பார்த்த போது தங்க நகைக்கு பதிலாக கற்கள் வைக்கப்பட்டிருந்தது. அப்போதுதான் அந்த பெண் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கண்ணன் கே.புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஏமாற்றிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


மதுரையில் பத்திர எழுத்தர் அலுவலகத்தை உடைத்து 3 லட்சம் கொள்ளை

மதுரை: மதுரை தல்லாகுளம் பகுதியில் பத்திர எழுத்தர் அலுவலகத்தை உடைத்து 3 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர் .

மீனாம்பாள்புரம் 9வது தெரு ஆபீஸர் டவுன் மேற்குப் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் 37 .இவர் தல்லாகுளம் சிங்கராயர் காலனி வடக்கு பகுதியில் பத்திரம் எழுதும் அலுவலகம் வைத்துள்ளார்.

இவர் வழக்கம்போல அலுவலகம்முடிந்து மூடி சென்றுவிட்டு மறுநாள் வந்து பார்த்தார்.அப்போது அதன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே அலுவலகத்தில் வைத்திருந்த ரூபாய் 3 லட்சத்து 60 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிவகுமார் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


வாகனச் சோதனையில் பணம் பறிமுதல்

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி ராமலிங்க நகர் ஆர்ச் அருகே பறக்கும் படை அதிகாரியும், மண்டல துணை தாசில்தாருமான நாகேஷ் தலைமையில் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணமின்றி ரூ.85 லட்சம் இருந்தது. இந்த பணத்தை பறிமுதல் செய்து அருப்புக்கோட்டை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories