December 5, 2025, 1:57 PM
26.9 C
Chennai

இந்துக்கள் மீதான மேற்கு வங்க வன்முறைகள்; இந்துமுன்னணி கண்டனம்!

westbengal
westbengal

தேர்தல் வெற்றிக் கொண்டாட்டமா வன்முறை் ஆட்டமா? மேற்கு வங்க வன்முறைகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. அதே நேரம், இதற்கு தக்க நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறது. 

இது குறித்து இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:

மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற அடுத்த வினாடியே கட்டற்ற வன்முறை வெடித்துள்ளது. தெருக்கள் தோறும் இந்துக்கள் தாக்கப்படுவதாக வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

இந்து பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். சிறுவர்களும், குழந்தைகளும் கூட இந்த மதவெறிக் கூட்டத்தின் வன்முறையில் இருந்து தப்ப முடியவில்லை.  தேசப் பிரிவினையின் போது இந்துக்கள் மீது எப்படி கொடூரமான முறையில் தாக்குதல்கள் நடைபெற்றதோ, அதை நினைவு படுத்துகின்ற விதமாக அதே பாணியில் தற்போது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.

பங்களாதேஷிலிருந்து ஊடுருவிய ஊடுருவல்காரர்கள், இஸ்லாமிய பயங்கரவாதிகள் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு இந்துக்கள் மீது, குறிப்பாக பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் மீது கொடூரமான வகையில் தாக்குதல்களை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தத் தாக்குதல்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.இதற்கு காரணமான மத பயங்கரவாதிகள் மீதும், மம்தா பானர்ஜி அரசு மீதும் மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து, அங்கே பரிதவித்து வரும் இந்துக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

அமெரிக்காவில் இனவெறி பிரச்சனை என்றால் இங்கே கண்டனம் தெரிவிக்கின்ற தமிழக அரசியல் கட்சிகள், ஈரான் ஈராக்கிற்காக இங்கே போராடுகின்ற கட்சிகள் மேற்கு வங்கத்தில் ஈவு இரக்கமின்றி மனித குலத்தின் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்களை கண்டும் காணாமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றது. அனைத்து அரசியல் கட்சிகளும் இதை கண்டிக்க முன்வர வேண்டும். 

இதற்கு காரணமானவர்களை மக்கள் முன், ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்ட முன் வர வேண்டும். மேலும் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். போன்ற சட்டங்களை உடனே அமல்படுத்தி, இதுபோன்ற கலவரங்களை நடத்தும் வெளிநாட்டினரை கண்டுபிடித்து மத்திய மாநில அரசுகள் உடனடியாக அவர்களை வெளியேற்ற வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories