February 20, 2026, 11:59 PM
26.7 C
Chennai

தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை! கடுமை காட்டும் ஆந்திர முதல்வர்!

jegan mohan reddy
jegan mohan reddy

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்துள்ள மற்ற மாநிலங்களை போல் அல்லாமல், வெறும் அறிவிப்போடு நின்றுவிடாத ஜெகன் தலைமையிலான ஆந்திர அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவுகள், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும், கொரோனா சிகிச்சை அளிக்க, தனியார் மருத்துவமனைகள் அதிகளவு கட்டணங்கள் வசூலித்து வருகின்றன.

அரசு கட்டணங்களை வகுத்தாலும் அது வெறும் பெயரளவில் மட்டுமே இருக்கிறது. அரசு நிர்ணயித்த தொகையை விட, பல மடங்கு கட்டணம் வசூலித்து கொண்டு தான் இருக்கின்றன.

ஆனால் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு பல அதிரடி நடவடிக்கைகளை, தைரியமாக எடுத்து அனைத்து தரப்பிலும் பாராட்டுக்களை பெற்றிருக்கிறது.

ஆந்திராவில், அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவச கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

அரசு காப்பீட்டு திட்டமான ‘ஆரோக்கிய ஸ்ரீ’ திட்டம் மூலம், பல தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் கீழ் உள்ளவர்கள், இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

அதே சமயம், ரூ.5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற, ஜெகன் அரசு குறைந்த கட்டணம் (ரூ.5,000 – ரூ.11000) நிர்ணயித்திருக்கிறது.வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல், அதனை செயல்படுத்தவும் நடவடிக்கைகளை ஜெகன் அரசு எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெகன், தனியார் மருத்துவமனைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கொரோனா காலத்தில், தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பது தெரிந்தால், அந்த மருத்துவமனையை மூடிவிட்டு, அரசே அதனை ஏற்று நடத்தும் என்றும், உடனடி நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால், 1902 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தெரிவித்ததுடன், அதனை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி ஒருவரையும் நியமித்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Topics

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

Entertainment News

Popular Categories