December 6, 2025, 11:20 PM
25.6 C
Chennai

கொரோனா தொற்றுடன் தப்பிய கைதி! பீதியில் மக்கள்!

Jail inmate
Jail inmate

கொரோனா தொற்று பாதித்த ஒரு கைதி, தப்பித்து ஓடிவிட்டாராம். அவரால் பலருக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சேலம் போலீசார் பதற்றமாகி உள்ளனர். பொதுமக்களும் அச்சமாகி உள்ளனர். எனவே, தனிப்படை அமைத்து அந்த கைதியை போலீசார் தேடி வருகின்றனர்.

அந்த கைதின் பெயர் வெங்கடேஷ்.. கடந்த 2019-ம் ஆண்டு கிரிமினல் குற்றத்துக்காக போலீசாரிடம் சிக்கினார். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் ஜெயிலிலும் அடைத்திருந்தனர்.

2 வருஷமாக ஜாமீன் கேட்டும், வெங்கடேசுக்கு கோர்ட் அனுமதி வழங்கவில்லை. அதனால், சேலம் ஜெயிலிலேயே இருந்து வந்தார்.

இந்நிலையில், 2 நாளைக்கு முன்பு, வெங்கடேசுக்கு திடீரென ஜூரம் வந்தது.. அதனால், உடனடியாக அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். கொரோனா டெஸ்ட் எடுத்ததில் தொற்று உறுதியானது. அதனால, அவரை சேலம் அன்னதானப்பட்டி மணியனூரில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்.

நேற்று முன்தினம் விடிகாலை 5 மணிக்கூ அந்த மையத்தினுள் நுழைந்தனர். வெங்கடேசின் பாதுகாப்புக்காக 3 வார்டன்களும் நிறுத்தப்பட்டனர். ஆனால், அன்றைய தினம் இரவு 8.30 மணியில் இருந்து வெங்கடேசை காணவில்லை.. அதிர்ச்சியடைந்த வார்டன்கள் எங்கெங்கோ தேடினர். ஆனாலும் வெங்கடேஷ் கிடைக்கவில்லை.

உடனடியாக அன்னதானப்பட்டி போலீசாருக்கும் தகவல் தந்தனர். அவர்களும் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இரவு 8.30 மணிக்கு வார்டன்கள் சாப்பிட சென்றுள்ளனர். அப்போதுதான் கைவிலங்கை உடைத்து கொண்டு வெங்கடேஷ் தப்பித்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, ரவிக்குமார், புஷ்பராஜ், சதீஷ் ஆகிய 3 வார்டன்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இப்போது வெங்கடேஷ் எங்கு தப்பித்து சென்றிருப்பார் என்று தெரியவில்லை. அவர் எங்கு தப்பித்து சென்றாலும், நோயை பரப்பும் அபாயம் உள்ளது. ஆனால், சேலத்திலேயே பதுங்கி இருக்கலாம் என்றுதான் போலீசார் கருதுகிறார்கள்.

எனவே, அவரை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்து சேலம் முழுக்க வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த தகவல் அறிந்து பொதுமக்களும் பீதியில் உள்ளனர். போலீசாரிடம் பிடிபடும் வரை, வெங்கடேஷ் அதுவரை யாருக்கும் தொற்றை பரப்பாமல் இருக்க வேண்டும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories