கடலூர் சம்பவம் மனதை கலங்கடிக்கிறது.. உரிய நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

edapadi cm tn
edapadi

கடலூரில் கொரோனா நோயாளியின் வெண்டிலேட்டர் மிஷின் மற்றும் ஆக்சிஜனை பிடுங்கி, உயிரை பறித்த செவிலியர்களின் செயலுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கடலூர்‌ மாவட்டம்‌, திட்டக்குடி பேரூராட்சி, நடு வீதியில்‌ வசித்து வந்த கண்ணன்‌ முதலியார்‌ என்பவருடைய மகன்‌ ராஜா அவர்கள்‌ (வயது 49) கொரோனா பெருந்தொற்று காரணமாக மூச்சுத்‌ திணறல்‌ ஏற்பட்டு, கடந்த 8 ஆம்‌ தேதி, கடலூர்‌ அரசு தலைமை மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டார்‌ என்றும்‌, நேற்று காலை வரை அவருக்கு கடலூர்‌ அரசு தலைமை மருத்துவமனையில்‌ தீவிர சிகிச்சைப்‌ பிரிவில்‌ மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார்கள்

நேற்று காலை சுமார்‌ 9 மணி அளவில்‌ நோயாளி காலை உணவு அருந்தும்‌ போது அங்கு வந்த பணியில்‌ இருந்த அரசு மருத்துவர்‌ மற்றும்‌ செவிலியர்கள்‌ அவருடைய வெண்டிலேட்டர்‌ மிஷின்‌ மற்றும்‌ ஆக்சிஜனை எடுத்துக்‌ கொண்டு வெளியேற முற்பட்டனர்‌ என்றும்‌, அதை தடுக்க முயன்ற அவருடைய மனைவியை (திருமதி கஸ்தூரி) தடுத்துவிட்டு, வெண்டிலேட்டர்‌ மிஷின்‌ மற்றும்‌ ஆக்சிஜனை எடுத்துச்‌ சென்று விட்டனர்‌ என்றும்‌, அவரது மனைவி புகார்‌ செய்துள்ளார்‌.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

மேலும்‌, போராடிய அவருடைய மனைவியை கீழே தள்ளிவிட்டனர்‌ என்றும்‌, இதை சற்றும்‌ எதிர்பாராத அவருடைய மனைவி அழுதபடியே தன்னுடைய கணவரை காப்பாற்ற முயன்ற போது நோயாளி துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்து விடுகிறார்‌ என்றும்‌ ஒரு காணொளி சமூக வலைதளங்களில்‌ வலம்‌ வருவதை பார்க்கும்‌ போது நெஞ்சு பதைப்பதைக்கிறது.

இவ்வளவு பெரிய ஒரு கொடூரமான சம்பவம்‌ கடலூர்‌ அரசு தலைமை மருத்துவனையில்‌ நேற்று காலையில்‌ நடந்துள்ளது. இது மிகவும்‌ கண்டிக்கத்தக்கது.

இதனை விரைந்து விசாரித்து தவறிழைத்தவர்கள்‌ யாராக இருந்தாலும்‌ அவர்கள்‌ மீது இந்திய குற்றவியல்‌ தண்டனைச்‌ சட்டப்‌ பிரிவின்‌ கீழ்‌ உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன்‌, இறந்தவர்‌ குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்‌ என தமிழக அரசினைக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌, என வலியுறுத்தியுள்ளார்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories