கடலூர் சம்பவம் மனதை கலங்கடிக்கிறது.. உரிய நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

edapadi cm tn
edapadi

கடலூரில் கொரோனா நோயாளியின் வெண்டிலேட்டர் மிஷின் மற்றும் ஆக்சிஜனை பிடுங்கி, உயிரை பறித்த செவிலியர்களின் செயலுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கடலூர்‌ மாவட்டம்‌, திட்டக்குடி பேரூராட்சி, நடு வீதியில்‌ வசித்து வந்த கண்ணன்‌ முதலியார்‌ என்பவருடைய மகன்‌ ராஜா அவர்கள்‌ (வயது 49) கொரோனா பெருந்தொற்று காரணமாக மூச்சுத்‌ திணறல்‌ ஏற்பட்டு, கடந்த 8 ஆம்‌ தேதி, கடலூர்‌ அரசு தலைமை மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டார்‌ என்றும்‌, நேற்று காலை வரை அவருக்கு கடலூர்‌ அரசு தலைமை மருத்துவமனையில்‌ தீவிர சிகிச்சைப்‌ பிரிவில்‌ மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார்கள்

நேற்று காலை சுமார்‌ 9 மணி அளவில்‌ நோயாளி காலை உணவு அருந்தும்‌ போது அங்கு வந்த பணியில்‌ இருந்த அரசு மருத்துவர்‌ மற்றும்‌ செவிலியர்கள்‌ அவருடைய வெண்டிலேட்டர்‌ மிஷின்‌ மற்றும்‌ ஆக்சிஜனை எடுத்துக்‌ கொண்டு வெளியேற முற்பட்டனர்‌ என்றும்‌, அதை தடுக்க முயன்ற அவருடைய மனைவியை (திருமதி கஸ்தூரி) தடுத்துவிட்டு, வெண்டிலேட்டர்‌ மிஷின்‌ மற்றும்‌ ஆக்சிஜனை எடுத்துச்‌ சென்று விட்டனர்‌ என்றும்‌, அவரது மனைவி புகார்‌ செய்துள்ளார்‌.

ALSO READ:  ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

மேலும்‌, போராடிய அவருடைய மனைவியை கீழே தள்ளிவிட்டனர்‌ என்றும்‌, இதை சற்றும்‌ எதிர்பாராத அவருடைய மனைவி அழுதபடியே தன்னுடைய கணவரை காப்பாற்ற முயன்ற போது நோயாளி துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்து விடுகிறார்‌ என்றும்‌ ஒரு காணொளி சமூக வலைதளங்களில்‌ வலம்‌ வருவதை பார்க்கும்‌ போது நெஞ்சு பதைப்பதைக்கிறது.

இவ்வளவு பெரிய ஒரு கொடூரமான சம்பவம்‌ கடலூர்‌ அரசு தலைமை மருத்துவனையில்‌ நேற்று காலையில்‌ நடந்துள்ளது. இது மிகவும்‌ கண்டிக்கத்தக்கது.

இதனை விரைந்து விசாரித்து தவறிழைத்தவர்கள்‌ யாராக இருந்தாலும்‌ அவர்கள்‌ மீது இந்திய குற்றவியல்‌ தண்டனைச்‌ சட்டப்‌ பிரிவின்‌ கீழ்‌ உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன்‌, இறந்தவர்‌ குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்‌ என தமிழக அரசினைக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌, என வலியுறுத்தியுள்ளார்.

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories