February 23, 2026, 4:10 AM
25.9 C
Chennai

கடலூர் சம்பவம் மனதை கலங்கடிக்கிறது.. உரிய நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

edapadi cm tn
edapadi

கடலூரில் கொரோனா நோயாளியின் வெண்டிலேட்டர் மிஷின் மற்றும் ஆக்சிஜனை பிடுங்கி, உயிரை பறித்த செவிலியர்களின் செயலுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கடலூர்‌ மாவட்டம்‌, திட்டக்குடி பேரூராட்சி, நடு வீதியில்‌ வசித்து வந்த கண்ணன்‌ முதலியார்‌ என்பவருடைய மகன்‌ ராஜா அவர்கள்‌ (வயது 49) கொரோனா பெருந்தொற்று காரணமாக மூச்சுத்‌ திணறல்‌ ஏற்பட்டு, கடந்த 8 ஆம்‌ தேதி, கடலூர்‌ அரசு தலைமை மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டார்‌ என்றும்‌, நேற்று காலை வரை அவருக்கு கடலூர்‌ அரசு தலைமை மருத்துவமனையில்‌ தீவிர சிகிச்சைப்‌ பிரிவில்‌ மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார்கள்

நேற்று காலை சுமார்‌ 9 மணி அளவில்‌ நோயாளி காலை உணவு அருந்தும்‌ போது அங்கு வந்த பணியில்‌ இருந்த அரசு மருத்துவர்‌ மற்றும்‌ செவிலியர்கள்‌ அவருடைய வெண்டிலேட்டர்‌ மிஷின்‌ மற்றும்‌ ஆக்சிஜனை எடுத்துக்‌ கொண்டு வெளியேற முற்பட்டனர்‌ என்றும்‌, அதை தடுக்க முயன்ற அவருடைய மனைவியை (திருமதி கஸ்தூரி) தடுத்துவிட்டு, வெண்டிலேட்டர்‌ மிஷின்‌ மற்றும்‌ ஆக்சிஜனை எடுத்துச்‌ சென்று விட்டனர்‌ என்றும்‌, அவரது மனைவி புகார்‌ செய்துள்ளார்‌.

மேலும்‌, போராடிய அவருடைய மனைவியை கீழே தள்ளிவிட்டனர்‌ என்றும்‌, இதை சற்றும்‌ எதிர்பாராத அவருடைய மனைவி அழுதபடியே தன்னுடைய கணவரை காப்பாற்ற முயன்ற போது நோயாளி துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்து விடுகிறார்‌ என்றும்‌ ஒரு காணொளி சமூக வலைதளங்களில்‌ வலம்‌ வருவதை பார்க்கும்‌ போது நெஞ்சு பதைப்பதைக்கிறது.

இவ்வளவு பெரிய ஒரு கொடூரமான சம்பவம்‌ கடலூர்‌ அரசு தலைமை மருத்துவனையில்‌ நேற்று காலையில்‌ நடந்துள்ளது. இது மிகவும்‌ கண்டிக்கத்தக்கது.

இதனை விரைந்து விசாரித்து தவறிழைத்தவர்கள்‌ யாராக இருந்தாலும்‌ அவர்கள்‌ மீது இந்திய குற்றவியல்‌ தண்டனைச்‌ சட்டப்‌ பிரிவின்‌ கீழ்‌ உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன்‌, இறந்தவர்‌ குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்‌ என தமிழக அரசினைக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌, என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories