கணவன் சைக்கோ.. முதலிரவில் மயங்கி விழுந்த மணமகள் புகார்! விசாரணையில் வெளியான உண்மை!

first night

முதலிரவு அறையில் கணவன் தன்னை கொடுமை படுத்தியதாகவும், அவரை சைக்கோ எனவும் கூறி மணமகள் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் சந்தைபேட்டையை சேர்ந்த முத்துவேல் என்பவரின் மகன் வெற்றிவேல் (30) என்பவருக்கும், அறந்தாங்கியை சேர்ந்த நாகநாதன் மகள் சூர்யா (24) என்பவருக்கும் கடந்த 17 ம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்த அன்று இரவு புதுமண தம்பதியினருக்கு உறவினர்கள் முதல் இரவு ஏற்பாடு செய்துள்ளனர். இதனை அடுத்து முதல் இரவு அறைக்குள் சென்ற கணவன் மனைவி தங்கள் பழைய கால வாழ்க்கை குறித்து பேசியுள்ளனர்.

அப்போது, திருமணத்திற்கு முன்பு தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்துகொள்ள முடியவில்லை.

ஆனால் நான் அவரை இப்போது மறந்துவிட்டேன். உன்னை கடைசி வரையிலும் நன்றாக பார்த்துக்கொள்வேன் என தனது புது மனைவியிடம் கூறியுள்ளார் வெற்றிவேல்.

இதனை அடுத்து காலையில் எழுந்து பார்த்தபோது மணமகள் சூர்யா முதல் இரவு அறையில் மயங்கி கிடந்துள்ளார்.

இதனை பார்த்து பதறிப்போன வெற்றிவேல் இதுகுறித்து பெற்றோரிடம் கூற அவர்கள் சூர்யாவை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், “தன் கணவர் சைகோ போல நடந்து கொள்வதாகவும், மேலும் தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி முடியை வெட்டி, மயக்க மாத்திரை கொடுத்ததாகவும் சூர்யா கூறியுள்ளார்”.

ஆனால் மணமகன் அப்படி ஏதும் நான் செய்யவில்லை எனவும், சூர்யா பொய் சொல்வதாகவும் கூறியுள்ளார். இதனால் 2 குடும்பத்தினர் மத்தியிலும் சலசலப்பு எழுந்ததை அடுத்து காரைக்குடி டி.எஸ்.பி., அருண் புது மண தம்பதி இருவரிடரும் விசாரணை மேற்கொண்டார்.

டி.எஸ்.பி., அருண் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மணமகளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும், பெற்றோர் வற்புறுத்தியதாலையே அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாகவும், கணவனை பழிவாங்க திட்டமிட்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியதும், உண்மையிலயே மணமகன் வெற்றிவேல் நிரபராதி என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மணமகள் சூர்யா நடத்திய நாடகத்தால் இருவரின் பெற்றோரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories