பெண்களை புகைப்படம் எடுத்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஆட்டோக்கார அசாரூதீன்!

auto-1
auto-1

கும்பகோணம் பகுதியில் இளம் பெண் ஒருவர், ஆட்டோ ஓட்டுநர் தன்னை செல்போனில் போட்டோ எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அதே ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 5 பேர் பெண்களை போட்டோ எடுத்து வைத்து கொண்டு மிரட்டி இன்டர்நெட் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பள்ளிவாசல் ஒன்றின் முன்னாள் நிர்வாகிகள் போலீஸிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்தவர் கரீனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)(28).

இவரின் கணவர் சவுதி அரேபியா நாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கரீனா தன் பிள்ளைகள் மற்றும் மாமியாருடன் மேலக்காவேரியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் அசாருதீன் என்பவர் தன்னை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாக கரீனா கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸிடம் புகார் அளித்துள்ளார்.

புகார் மனுவில் கூறியிருப்பதாவது, “என் குழந்தைகளை அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அசாருதீன் பள்ளிக்கு அழைத்து சென்று வந்தார். அப்போது என்னிடம் ஆசை வார்த்தைகளை கூறி, என்னை ஏமாற்றி என்னுடன் நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோக்களை எடுத்து கொண்டார். பின்னர் அதை வைத்து அசாருதீன் என்னை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த 14-ம் தேதி என் வீட்டுவாசலுக்கு வந்து எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், என்னை பாலியல் உறவுக்கு அழைத்து கட்டாயப்படுத்தினார்.

மேலும் மூன்றாவது நபர் மூலமாக எனது மாமியாரிடம் தெரியப்படுத்தி எனது வீட்டில் பிரச்னை செய்துள்ளார். இதையடுத்து எனது மாமியார் என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டார். அசாருதீன் மேலும் 20 பெண்களிடம் பழகி மிரட்டி பணம் பறித்துள்ளார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இதே போல் அசாருதீன் உள்ளிட்ட 5 பேர், பெண்களை மிரட்டி இன்டர்நெட் மூலம் பாலியல் தொழில் செய்து வந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்களும் கும்பகோணம் போலீஸ் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து புகார் அளித்தவர்கள் தரப்பில் பேசினோம், “இளைஞர்கள் 5 பேர், பெண்கள் சிலரிடம் பழகி போட்டோ எடுத்து வைத்து கொண்டு, பின்னர் அதை வைத்து மிரட்டி இன்ட்ர்நெட் மூலம் அந்த பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரிகிறது. இதனை செய்த அந்த இளைஞர்களுக்குள்ளேயே பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து விஷயம் வெளியே தெரிந்துள்ளது.

இதனை தொடர்ந்து பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் ஆலோசனை நடத்தி அசாருதீன், அப்துல் ரஹ்மான், அகமது ஜப்ரான், சதக்கத்துல் ஆசிப் பாட்ஷா, பவாஸ் அகமது ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீஸிடம் புகார் அளிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் ஜமாத்தில் உள்ள நிர்வாகிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தனர். ஆட்டோ ஓட்டுநர் அசாருதீன் மற்றும் அவரது நண்பர்களும் சேர்ந்து, மேலக்காவேரி பகுதியில் உள்ள சில பெண்களை பணத்துக்காக இணையதளம் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இந்த செயலில் ஈடுபட்ட அவர்கள் மீது வழக்கு பதிந்து உடனடியாக விசாரித்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்க வேண்டும் என டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். இதனை தீர விசாரிக்கும் பட்சத்தில் பொள்ளாச்சியை போன்று இங்கேயும் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவம் நடந்துள்ளது தெரிய வரும்” என்றனர். இது தொடர்பாக கும்பகோணம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் உத்தரவில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு அசாருதீனை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories