14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா!

ramar
ramar

சிவகாசியில் மகள் உறவு முறை கொண்ட பள்ளி மாணவியை பாலியல் செய்து கர்ப்பமாக்கி குழந்தை கொடுத்த சித்தப்பாவை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் நடுவூர் காளியம்மன் கோவில் தெருவில் வசித்தவர் பாலமுருகன். இவர் மனைவி ஈஸ்வரி. இந்த தம்பதியினருக்கு காளீஸ்வரி (வயது 14) என்ற மகள் உள்ளார்.

காளீஸ்வரி தற்போது விஸ்வநத்தம் அரசு உயர்நிலை ப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் தாயார் ஈஸ்வரி தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். பாலமுருகன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் காளீஸ்வரி தனது தாயார் ஈஸ்வரி உடன் வசித்து வருகிறார்.

vankodumai - 2026

கடந்த ஓராண்டுக்கும் மேல் கொரோனா காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள பட்சத்தில் காளீஸ்வரி ஆன்லைன் மூலமாக வீட்டில் தான் மட்டும் தனியாக இருந்தபடியே கல்வி பயின்று வருகிறார்.

அவர் தாயார் ஈஸ்வரி தீப்பெட்டி தொழிற்சாலை பணிக்குச் சென்ற போது மாணவி காளீஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்த சமயத்தை பயன்படுத்திய ஈஸ்வரியின் தங்கை ஆனந்தியின் கணவர் ராமர் (வயது 29) என்பவர் சித்தப்பா என்ற முறையில் மாணவியின் வீட்டிற்கு தினந்தோறும் வந்து சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது ராமர், மாணவி காளிஸ்வரியை தனது மகள் உறவு முறை என்று கூட பாராமல் தினந்தோறும் பாலியல் தொந்தரவு செய்து வந்ததால் காளீஸ்வரி கர்ப்பமானார்.

கடந்த ஓராண்டாக மாணவியை அவரது சித்தப்பா பாலியல் தொந்தரவு செய்தபோது காளீஸ்வரி எதிர்ப்பு தெரிவித்தாலும் நான் உனது சித்தியுடன் வாழ மாட்டேன் உனது தாயாரை கேவலப்படுத்தி விடுவேன் என ராமர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவி கர்ப்பமான விஷயம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது இது குறித்து மாணவியின் தாய் ஈஸ்வரி மற்றும் சித்தி ஆனந்தி கேட்டபோது தான் கர்ப்பம் ஆனதற்கு காரணம் சித்தப்பா ராமர் என்று தெரிவித்த நிலையில் கர்ப்பத்தை கலைக்க முடியாமல் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவி காளீஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த கொடூர சம்பவம் குறித்து திருத்தங்கல் அரசு மருத்துவமனை சார்பாக சிவகாசியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் அங்கு சென்ற மகளிர் போலீசார் பள்ளி மாணவி காளீஸ்வரி மற்றும் குடும்பத்தினரிடம் நடத்திய ரகசிய விசாரணையில் சம்பவம் நடந்தது உண்மை என்று தெரியவந்தது.

இதையடுத்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்து கர்ப்பமாக்கி குழந்தை பெறச் செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் காந்தி நகரை சேர்ந்த மாணவியின் சித்தப்பா ராமர் என்பவரை மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விருதுநகர் சிறையில் அடைத்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories