கொரோனா: வாடிக்கையாளரைக் காப்பாற்ற ஏடிஎம் மிஷின் மேல் வேப்பிலை! காவலாளியின் நம்பிக்கை!

Published:

atm
atm

வாடிக்கையாளரை பாதுகாக்க ஏடிஎம் மீது வேப்பிலை வைக்கும் காவலாளி! தான் பணிபுரியும் ஏடிஎம் மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க ஏடிஎம் காவலாளி ஏடிஎம் இயந்திரத்தின் மீது வேப்பிலையை வைத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் பள்ளிபாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த ஏடிஎம் காவலாளி ஒருவர் தான் பணிபுரியும் ஏடிஎம் மையத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தின் மீது வேப்பிலையை வைத்துள்ளார்.

வாடிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் தினமும் ஏடிஎம் இயந்திரத்தின் மீது இந்த வேப்பிலையை வைத்து இருப்பதாகவும் வேப்பிலையின் மகிமை காரணமாக வாடிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று பரவாது என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Related articles

Recent articles

spot_img