அரசுப் பள்ளியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பல்!

Counterfeit liquor
Counterfeit liquor

அவிநாசி அருகேயுள்ள, அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நள்ளிரவில் கள்ளச்சாராயம் காய்ச்சிய, 2 பெண்கள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியம், கருமாபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அவிநாசி மதுவிலக்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் முரளி உத்தரவில், எஸ்.ஐ.,கள் சர்வேஸ்வரன், ஜெகதீசன் உள்ளிட்ட போலீசார், நேற்று நள்ளிரவு, 2:00 மணிக்கு, ரெய்டு நடத்தினர். பள்ளிக்குள் உள்ள கழிப்பறை அருகே, சமையல் காஸ் அடுப்பு வைத்து, சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்தது தெரிய வந்தது.

அவர்களை விசாரித்ததில், செம்பாக்கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன், 55. ஆரான் (எ) ஆறுச்சாமி, 65, விக்னேஷ்வரன், 28, அவரது மனைவி காய்த்ரி (எ) தீபா, 23. சராசாள் (எ) லட்சுமி, 45 ஆகியோர் என்பது தெரிய வந்தது.

அவர்களை போலீசார் கைது செய்து, அங்கிருந்த, 10 லிட்டர் சாராயம், 50 லிட்டர் ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஆண் குற்றவாளிகள், திருப்பூர் சிறையிலும், பெண் குற்றவாளிகள், கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள பல்வேறு கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் பலரும் ஈடுபடத் துவங்கியுள்ளனர்; கடந்த, பல ஆண்டுகளுக்கு முன் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்ட பலரும் மீண்டும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தொழிலில் ஈடுபட துவங்கியுள்ளனர் என்பது, போலீசாரின் கண்காணிப்பில் தெரிய வந்திருக்கிறது.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடப்பதை தவிர்க்க, குற்றவாளிகளை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories