அவைக்காவலரை தாக்கியதாக வழக்கு: தேமுதிக., எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

tamilnadu-assemblyசென்னை: பேரவை அவைக்காவலரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தேமுதிக., எம்.எல்.ஏ.க்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற்றது. அப்போது, தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வும், எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான மோகன்ராஜ் பேசும்போது கூறிய வார்த்தையால், அவையில் பிரச்னை ஏற்பட்டது. அதை அடுத்து, தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற அவைத்தலைவர் ப.தனபால் உத்தரவிட்டார். அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அவைக் காவலர் விஜயன் ஈடுபட்டபோது தாக்கப்பட்டார். இது குறித்து கோட்டை காவல் நிலையத்தில் அவர் புகார் ஒன்றை அளித்தார். அதன் அடிப்படையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தினகரன், சேகர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இருவருக்கும் நிபந்தனையின் பேரில் முன்ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது, இருவரும் திங்கள், வெள்ளிக்கிழமையில் கோட்டை காவல் நிலையத்தில் காலை 10.30க்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனைப் படி, இருவரும் ஆஜராகி திங்கள் அன்றும், வெள்ளிக் கிழமையிலும் கையெழுத்திட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் தினகரன், சேகர் ஆகியோருக்கு எதிராக ஜார்ஜ் டவுண் 7-வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் கடந்த 3 ஆம் தேதி கோட்டை போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். குற்றப் பத்திரிகையின் நகலை நீதிமன்றத்தில் ஆஜராகி பெற்றுக்கொள்ள, இருவருக்கும் போலீஸார் சம்மன் தயார் செய்தனர். கோட்டை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நேற்று இருவரும் ஆஜரானபோது அந்த சம்மனை அவர்களிடம் போலீசார் கொடுத்தனர். ஆனால், அதனை அவர்கள் வாங்க மறுத்தனர். முறைப்படி அதை வீட்டில் வந்து கொடுக்கும்படி கூறிச் சென்றுவிட்டனர்..

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories