வங்கி கணக்கு தகவல்களைக் கூறியதால்.. ரூ.20 லட்சம் அபேஸ்!

cellphone speech - 2026

புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் வாசுதேவன், இவரது மனைவி கீதா. வாசுதேவன் ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர். இவருக்கும், கீதாவுக்கும் கரூரு வைஸ்யா வங்கியில் கூட்டுக் கணக்கு இருக்கிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கீதாவை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தான் கரூர் வைஸ்யா வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறியுள்ளார்.

கீதாவிடம் வங்கிக் கணக்கின் விவரங்களைக் கேட்டுள்ளார். ஆனால், கீதாவோ யாரென தெரியாத நபரிடம் விவரங்களைச் சொல்லக்கூடாது என்று சற்று எச்சரிக்கையுடனேயே செயல்பட்டிருக்கிறார்.

மறுமுனையில் பேசிய நபரோ விடாக்கண்டன்போல் அடுத்தடுத்து 3 முறை ஃபோன் செய்துள்ளார். அவர் பேசிய தொணியிலிருந்து அந்த நபர் வங்கி உயர் அதிகாரி தான் என்று கீதாவும் நம்பிவிட்டார்.

முதலில் கீதா வாசுதேவன் தம்பதியினரின் வங்கிக் கணக்கை அவர் கேட்டுள்ளார். பின்னர் நெட்பேங்கிக் ஆக்டிவேட் செய்யும் நோக்கத்தில் அவர்களின் கஸ்டமர் ஐடி, ஏடிம் எண், பின்னால் இருக்கும் சிவிவி, கடைசியாக மொபைல் எண்ணுக்கு வந்த ஓடிபி என அத்தனையையும் அந்த ஹைடெக் திருடன் கேட்க சற்றும் சளைக்காமல் அள்ளிக் கொடுத்திருக்கிறார் கீதா.

அப்புறம் என்ன நெட் பேங்கிங்கை ஆக்டிவேட் செய்துவிட்டு ஒரே மூச்சாக ரூ.20 லட்சம் அபேஸ் செய்தார் அந்த நபர். வெளியில் சென்ற வாசுதேவன் வீடு திரும்பியபோது கீதா நடந்தவற்றை சொல்ல பதறிப்போய் பக்கத்திலிருக்கும் ஏடிஎம் சென்று பார்த்துள்ளார் வாசுதேவன்.

மொத்தமாக ரூ.20 லட்சம் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். சில நிமிட பதற்றத்துக்குப் பின்னர், கரூர் வைஸ்யா வங்கியில் உள்ள தனது உறவினரின் உதவியை நாடினார்.

அவர் அந்த வங்கியின் உயரதிகாரி என்பதால் உடனே செயல்பட்டு ரூ.11 லட்சம் வரை மீட்டுத்தந்துள்ளார். ஆனால், ரூ.9 லட்சம் போன இடம் தெரியவில்லை. அப்புறம் என்ன சைபர் க்ரைம் போலீஸார் உதவியை நாடிச் சென்றனர்.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஹைடெக் திருடனை தேடி வருகின்றனர். பொதுவாகவே இதுபோன்ற ஹைடெக் திருடன்களின் டார்கெட் வயதானவர்கள், தனியாக வசிக்கும் பெண்களாகவே இருக்கின்றனர் என்கின்றனர் சைபர் க்ரைம் போலீஸார்.

ஆன்லைன் வங்கி மோசடி குறித்து முதல் 1 மணி நேரத்துக்குள் வங்கிக்கோ அல்லது சைபர் க்ரைம் பிரிவிக்கோ தகவல் கொடுத்தால் பண மீட்பு நடவடிக்கை மிகமிக எளிது என்கின்றனர் அதிகாரிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories