December 6, 2025, 2:02 AM
26 C
Chennai

வங்கி கணக்கு தகவல்களைக் கூறியதால்.. ரூ.20 லட்சம் அபேஸ்!

cellphone speech - 2025

புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் வாசுதேவன், இவரது மனைவி கீதா. வாசுதேவன் ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர். இவருக்கும், கீதாவுக்கும் கரூரு வைஸ்யா வங்கியில் கூட்டுக் கணக்கு இருக்கிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கீதாவை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தான் கரூர் வைஸ்யா வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறியுள்ளார்.

கீதாவிடம் வங்கிக் கணக்கின் விவரங்களைக் கேட்டுள்ளார். ஆனால், கீதாவோ யாரென தெரியாத நபரிடம் விவரங்களைச் சொல்லக்கூடாது என்று சற்று எச்சரிக்கையுடனேயே செயல்பட்டிருக்கிறார்.

மறுமுனையில் பேசிய நபரோ விடாக்கண்டன்போல் அடுத்தடுத்து 3 முறை ஃபோன் செய்துள்ளார். அவர் பேசிய தொணியிலிருந்து அந்த நபர் வங்கி உயர் அதிகாரி தான் என்று கீதாவும் நம்பிவிட்டார்.

முதலில் கீதா வாசுதேவன் தம்பதியினரின் வங்கிக் கணக்கை அவர் கேட்டுள்ளார். பின்னர் நெட்பேங்கிக் ஆக்டிவேட் செய்யும் நோக்கத்தில் அவர்களின் கஸ்டமர் ஐடி, ஏடிம் எண், பின்னால் இருக்கும் சிவிவி, கடைசியாக மொபைல் எண்ணுக்கு வந்த ஓடிபி என அத்தனையையும் அந்த ஹைடெக் திருடன் கேட்க சற்றும் சளைக்காமல் அள்ளிக் கொடுத்திருக்கிறார் கீதா.

அப்புறம் என்ன நெட் பேங்கிங்கை ஆக்டிவேட் செய்துவிட்டு ஒரே மூச்சாக ரூ.20 லட்சம் அபேஸ் செய்தார் அந்த நபர். வெளியில் சென்ற வாசுதேவன் வீடு திரும்பியபோது கீதா நடந்தவற்றை சொல்ல பதறிப்போய் பக்கத்திலிருக்கும் ஏடிஎம் சென்று பார்த்துள்ளார் வாசுதேவன்.

மொத்தமாக ரூ.20 லட்சம் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். சில நிமிட பதற்றத்துக்குப் பின்னர், கரூர் வைஸ்யா வங்கியில் உள்ள தனது உறவினரின் உதவியை நாடினார்.

அவர் அந்த வங்கியின் உயரதிகாரி என்பதால் உடனே செயல்பட்டு ரூ.11 லட்சம் வரை மீட்டுத்தந்துள்ளார். ஆனால், ரூ.9 லட்சம் போன இடம் தெரியவில்லை. அப்புறம் என்ன சைபர் க்ரைம் போலீஸார் உதவியை நாடிச் சென்றனர்.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஹைடெக் திருடனை தேடி வருகின்றனர். பொதுவாகவே இதுபோன்ற ஹைடெக் திருடன்களின் டார்கெட் வயதானவர்கள், தனியாக வசிக்கும் பெண்களாகவே இருக்கின்றனர் என்கின்றனர் சைபர் க்ரைம் போலீஸார்.

ஆன்லைன் வங்கி மோசடி குறித்து முதல் 1 மணி நேரத்துக்குள் வங்கிக்கோ அல்லது சைபர் க்ரைம் பிரிவிக்கோ தகவல் கொடுத்தால் பண மீட்பு நடவடிக்கை மிகமிக எளிது என்கின்றனர் அதிகாரிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories