திண்டுக்கல்: புதிய பைக்கில் பழனி கோவிலுக்குசாமி கும்பிடச் சென்று திரும்பிய தம்பதியர் கார் மோதி பலியாகினர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சத்யாநகரைச் சேர்ந்த வீரமணி(23) அங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மலர்விழி(19). காதல் திருமணம் செய்த இவர்களுக்கு குழந்தை இல்லை. வீரமணி சில தினங்களுக்கு முன் புதிதாக பைக் ஒன்று வாங்கினார். அதில் அவர் நேற்று மனைவியுடன் பழனிக்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்றார். சாமி தரிசனம் முடித்து பைக்கில் வீட்டுக்குத் திரும்பியபோது, விருபாச்சி மேட்டுப்பகுதியில் எதிரே வேகமாக வந்த கார் பைக் மீது மோதியது. இதில் வீரமணி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மலர்விழி ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சத்திரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Popular Categories



