நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம்

Published:

திருநெல்வேலியில் வேளாண் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழக வேளாண் துறையில் 4 ஓட்டுநர்கள் நியமனத்துக்கு ரூ.12 லட்சம் லஞ்சம் கேட்டு, அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி தொல்லை கொடுத்ததால், நெல்லை மாவட்ட வேளாண் துறை செயற்பொறியாளர் முத்துக் குமாரசாமி தற்கொலை செய்து கொண்டார் என்று புகார் கூறப்பட்டது. இதை அடுத்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தர விட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கட்சிப் பொறுப்புகளில் இருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதை அடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக காவல்துறை தலைவர் அசோக்குமார் நேற்று உத்தரவிட்டார். முன்னதாக, ஜன.20ம் தேதி நெல்லை ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து வேளாண் துறை செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட வழக்கை நெல்லை ரயில் நிலைய போலீஸார் விசாரித்து வந்தனர்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Related articles

Recent articles

spot_img