செங்கத்தில் கோவிட் -19 தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முனைப்புடன் செயல்படுத்திட வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர் திரு. லட்சுமி நரசிம்மன், தலைமையில் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்கள் அனைவரும் அனைத்து இடங்களிலும் அமுத கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், கிருமிநாசினி பயன்படுத்துதல், இவைகளை பொதுமக்கள் பின்பற்றுவதை அனைத்து அரசு அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்திட அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள், வட்டார மருத்துவ அலுவலர், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- எஸ்.ஆர்.வீ. பாலாஜி, திருவண்ணாமலை