December 6, 2025, 11:18 AM
26.8 C
Chennai

5 பவுன் நகைக்காக எஜமானியைக் கொன்ற வேலைக்காரி!

mery - 2025

வலிப்பு நோயால் மூதாட்டி இறந்ததாக கருதப்பட்ட நிலையில், 5 பவுன் நகைக்காக வீட்டு வேலைக்கார பெண் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை முத்தமிழ் நகர் தெருவை சேர்ந்தவர் ஜாக்குலின் மேரி (65). இவரது கணவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்த நிலையில், தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

இவரது மகன் ரயில்வே துறையில் டிடிஆர் ஆக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, கடந்த 15ஆம் தேதி பணிக்காக ஜாக்குலின் மகன் மதுரை சென்று விடவே, வீட்டில் வேலைக்கார பெண்ணுடன் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி பிராங்கிளின் தனது தாய் ஜாக்குலின் மேரிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அவர் நீண்ட நேரமாகியும் தொலைபேசியை எடுக்கவில்லை.

இதனை அடுத்து தனது வீட்டின் மாடியில் குடியிருந்தவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அம்மா போனை எடுக்கவில்லை என்னவென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து, அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு ஜாக்குலின் மேரி நாற்காலியில் இறந்த நிலையில் இருந்துள்ளார். இதனை அடுத்து அவரது மகனுக்கு தகவல் தெரிவித்து அவரது மகன் மதுரையில் இருந்து தஞ்சை வந்து உள்ளார்.

இந்நிலையில் தனது தாய்க்கு காக்கா வலிப்பு நோய் இருப்பதாகவும் அதனால் உயிர் இழந்திருக்ககூடும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் மர்ம மரணம் என காவல்துறை வழக்கை முடித்து விட்டனர்.

இதனிடையே, வழக்கில் திடீர் திருப்பமாக, அவரது மகன் தனது தாய் அணிந்திருந்த செயின், வளையல் ஆகியவற்றை காணவில்லை, எனவே தனது தாயின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென காவல்துறையிடம் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உடற்கூறு ஆய்வில், ஜாக்லின் கொலை செய்யப்பட்டுள்ளதாக, மருத்துவ அறிக்கை வரவே காவல்துறையினர் இரண்டு தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர்.

dency - 2025

அப்போது விசாரணையில் வீட்டில் வேலை செய்த ஆரோக்கிய டென்சி, முன்னுக்கு பின்னாக பேசியுள்ளார்.

இதையடுத்து, காவல்துறையினர் பாணியில் அவரை விசாரணை செய்ததில், ஜாக்லினை ஐந்தரை பவுன் நகைக்காக கொலை செய்ததாகவும், அவரது தொலைபேசியை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் மர்ம மரணம் என்ற வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்து, ஆரோக்கிய டென்சியை கைது செய்தனர்.

மேலும் ஜாக்லின் இறுதி சடங்கில் எதுவும் தெரியாதது போல் கூடவே இருந்து அனைத்து வேலைகளையும் செய்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories