5 பவுன் நகைக்காக எஜமானியைக் கொன்ற வேலைக்காரி!

mery - 2026

வலிப்பு நோயால் மூதாட்டி இறந்ததாக கருதப்பட்ட நிலையில், 5 பவுன் நகைக்காக வீட்டு வேலைக்கார பெண் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை முத்தமிழ் நகர் தெருவை சேர்ந்தவர் ஜாக்குலின் மேரி (65). இவரது கணவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்த நிலையில், தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

இவரது மகன் ரயில்வே துறையில் டிடிஆர் ஆக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, கடந்த 15ஆம் தேதி பணிக்காக ஜாக்குலின் மகன் மதுரை சென்று விடவே, வீட்டில் வேலைக்கார பெண்ணுடன் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி பிராங்கிளின் தனது தாய் ஜாக்குலின் மேரிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அவர் நீண்ட நேரமாகியும் தொலைபேசியை எடுக்கவில்லை.

இதனை அடுத்து தனது வீட்டின் மாடியில் குடியிருந்தவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அம்மா போனை எடுக்கவில்லை என்னவென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து, அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு ஜாக்குலின் மேரி நாற்காலியில் இறந்த நிலையில் இருந்துள்ளார். இதனை அடுத்து அவரது மகனுக்கு தகவல் தெரிவித்து அவரது மகன் மதுரையில் இருந்து தஞ்சை வந்து உள்ளார்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இந்நிலையில் தனது தாய்க்கு காக்கா வலிப்பு நோய் இருப்பதாகவும் அதனால் உயிர் இழந்திருக்ககூடும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் மர்ம மரணம் என காவல்துறை வழக்கை முடித்து விட்டனர்.

இதனிடையே, வழக்கில் திடீர் திருப்பமாக, அவரது மகன் தனது தாய் அணிந்திருந்த செயின், வளையல் ஆகியவற்றை காணவில்லை, எனவே தனது தாயின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென காவல்துறையிடம் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உடற்கூறு ஆய்வில், ஜாக்லின் கொலை செய்யப்பட்டுள்ளதாக, மருத்துவ அறிக்கை வரவே காவல்துறையினர் இரண்டு தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர்.

dency - 2026

அப்போது விசாரணையில் வீட்டில் வேலை செய்த ஆரோக்கிய டென்சி, முன்னுக்கு பின்னாக பேசியுள்ளார்.

இதையடுத்து, காவல்துறையினர் பாணியில் அவரை விசாரணை செய்ததில், ஜாக்லினை ஐந்தரை பவுன் நகைக்காக கொலை செய்ததாகவும், அவரது தொலைபேசியை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் மர்ம மரணம் என்ற வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்து, ஆரோக்கிய டென்சியை கைது செய்தனர்.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

மேலும் ஜாக்லின் இறுதி சடங்கில் எதுவும் தெரியாதது போல் கூடவே இருந்து அனைத்து வேலைகளையும் செய்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories