December 6, 2025, 3:30 AM
24.9 C
Chennai

கொசு விரட்ட எடுத்த முயற்சி! பாட்டி, பேரன் உயிர் போச்சு!

patti 1 - 2025

கொசுவை விரட்ட நினைத்து பாட்டி மற்றும் பேரன் உயிரிழந்த சம்பவம் பெரும் சொகதைஎற்படுதி உள்ளது.

61 வயதான சொக்கலிங்கம் என்ற நபர், சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் பொன்னி நகர், திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்துள்ளார்.

குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவருக்கு 55 வயதான புஷ்பலட்சுமி என்ற மனைவியும், 38 வயதான மல்லிகா என்ற மகளும், 11 வயதான விஷால் என்ற பேரனும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இவர்களின் வீட்டில் அதிக அளவில் கொசு தொல்லை இருந்துள்ளது. இதனால் வீட்டில் இருந்த தட்டில், அடுப்பு கரியை போட்டு தீ வைத்து வீடு முழுவதும் புகை மூட்டத்தை பரப்பி உள்ளனர்.

இந்நிலையில், புகை குறைவதற்கு முன்பே அந்த அறையில் இருந்த ஏ.சி.யை ஆன் செய்து கதவுகளை அடைத்து விட்டனர்.

இதில் அங்கு படுத்து தூங்கிய 4 பேரும் மூச்சுத்திணறி படுக்கையிலேயே மயங்கினர். நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் சொக்கலிங்கம் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது வீட்டின் மாடியில் வாடகைக்கு வசிக்கும் சீதா என்பவர், அதே பகுதியில் வசிக்கும் சொக்கலிங்கத்தின் மகன் வேலுவுக்கு தகவல் தெரிவித்தார்.

peran - 2025

அவர் அங்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தனது தாய், தந்தை உள்பட 4 பேரும் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 4 பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் புஷ்பலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.

மேலும் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருடைய பேரன் விஷாலும் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

மேலும் சொக்கலிங்கம், அவருடைய மகள் மல்லிகா இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தந்தை-மகள் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொசுவை விரட்ட போடப்பட்ட புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி பாட்டி-பேரன் உயிரிழந்ததும், தந்தை, மகள் இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories