February 20, 2026, 10:41 PM
27.3 C
Chennai

இறுதி சடங்கிற்கு பணம் கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட முதிய தம்பதிகள்!

poison
poison

திண்டுக்கல் அருகே கவனிக்க உறவினர்கள் இல்லாததால் மனமுடைந்த முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அடுத்த கணவாய்பட்டியை சேர்ந்தவர் தொத்தன்(65). இவரது மனைவி வீராயி (60). இவர்களுக்கு குழந்தை இல்லை. இருவரும் பெரும்பாறை அருகேயுள்ள மஞ்சள்பரப்பு மலைக்கிராமத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர்.

முதுமை காரணமாக இருவரும் அவதிப்பட்டு வந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு வீராயிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது.

இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் வீராயிக்கு நோய் குணமாக வில்லை.

மனைவி உடல்நிலை மோசமடைந்ததை உணர்ந்த தொத்தன், அவருடன் ஒன்றாக சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.

இதனையடுத்து, நேற்று தம்பதியினர் இருவரும் அரளி விதைகளை அரைத்து குடித்த நிலையில், வீராயி உடனடியாக மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தபோது, தொத்தன் தாங்கள் இருவரும் அரளி விதைகளை சாப்பிட்டதை கூறி, காப்பாற்ற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இறப்புக்கு பின் தங்களை ஒரே இடத்தில் புதைக்க வேண்டும் என கூறிய தொத்தன், வீட்டில் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை இறுதிச்சடங்கு செலவுக்கு வைத்து கொள்ளுமாறு, அருகில் இருப்பவர்களிடம் கொடுத்து விட்டு உயிரிழந்தார்.

தகவல் அறிந்த தாண்டிக்குடி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories