February 20, 2026, 4:21 AM
25.4 C
Chennai

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய வசதி!

airport-Chennai
airport-Chennai

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் ஆர்.டி.-பிசிஆர் பரிசோதனைக்காக ஆன்லைன் முன்பதிவு வசதி என்ற புதிய முறையை சென்னை விமான நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கும், அதேபோல வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை சான்றிதழ்கள் கண்டிப்பாக தேவை என்று சுகாதார துறை அறிவித்துள்ளது.

இதையடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனைக்கான மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் வரை 10க்கும் குறைவான சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

தற்போது 15க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதில், பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதனால் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யும் கவுன்டர்களில் கூட்டம் அதிகரித்து நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இதை தவிர்க்க பயணிகளின் வசதிக்காக புதிய முறையை சென்னை விமான நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி ஆர்.டி.-பிசிஆர் பரிசோதனைக்காக வரும் பயணிகள் முன்னதாகவே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான க்யூஆர் கோடு சென்னை விமான நிலைய ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

அதில் முன்பதிவு செய்து கொண்ட பயணிகளுக்கு, நேரம் ஒதுக்கப்பட்டு விடும். அந்த நேரத்தில் பயணிகள் வந்து, வரிசையில் நிற்காமல் உடனடியாக பரிசோதனையை முடித்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஏற்பாட்டால் பயணிகள் பரிசோதனைக்காக நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories