கொரோனா காரணமாக தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு வழக்கமாக நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வானது நடத்தப்படாமல் இருக்கிறது.
இதற்கு மத்தியில் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்ததால் செப்-1 முதல் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க அரசு ஆயத்தமாகி வருகிறது. இது குறித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்க திட்டமிட்டுள்ளது.
அனைத்து பாடங்களும் நடத்த முடியாத சூழ்நிலை நிலவுவதால் 50% பாடத்திட்டங்கள் குறைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தபடவில்லை.
கூடிய விரைவில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.