spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்கல்வெட்டு கல்லைத் தூக்கி வந்து... கண்மாய் கட்டியுள்ள ‘பேரறிஞர்கள்’!

கல்வெட்டு கல்லைத் தூக்கி வந்து… கண்மாய் கட்டியுள்ள ‘பேரறிஞர்கள்’!

- Advertisement -
madurai kalvettu kanmai
madurai kalvettu kanmai

கி.பி 9ம் , 13 மற்றும் 16ம் நூற்றாண்டை சேர்ந்த துண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தே.கல்லுப்பட்டி அருகே வில்லூர் பெரிய கண்மாய் மடையில் கி.பி.9 ,13, மற்றும் 16ம் நூற்றாண்டை சேர்ந்த வெவ்வேறு காலக்கட்டத்தை கொண்ட துண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தே.கல்லுப்பட்டியில் இருந்து கள்ளிக்குடி செல்லும் வழியில் உள்ள வில்லூரில் மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் து. முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லெட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன், நாகபாண்டி, பழனிமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதியை மேற்பரப்பு கள ஆய்வு செய்தபோது பெரிய கண்மாய் மடை பகுதியில் வெவ்வேறு காலக்கட்டத்தை சேர்ந்த துண்டு கல்வெட்டு கண்டறியப்பட்டது.

madurai kalvettu 2
madurai kalvettu 2

விவசாயத்தில் செழிப்பான பகுதியாக விளங்கிய இவ்வூரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பெரிய கண்மாயில் நீர் வெளியேற மூன்று கண் மடை அமைந்துள்ளது.

இதில் முதல் கண்ணின் சுவர் பக்கவாட்டியில் 1 அடி நீளம் ½ அடி அகலம் கொண்ட ஒரு கல்லில் 6 வரிகள் கொண்ட கி.பி. 9 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டும், இரண்டாவது கண்ணில் சுவரின் உட்புறமாக சொருகப்பட்ட நிலையில் 3 வரி கொண்ட கி.பி. 13 ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டும் உள்ளன.

இக்கல்வெட்டு நீர் வழிந்தோடும் இடத்தில் இருப்பதால் பல சொற்கள் அழிந்த நிலையில் உள்ளதால் சொற்களின் பொருள் அறிய முடியவில்லை.

madurai kalvettu 3
madurai kalvettu 3

கி.பி. 16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு செய்தி :

பெரிய கண்மாய் மூன்றாவது கண் மடையில் வலது புற சுவரின் 1 அடி அகலம், 3 அடி நீளம் கொண்ட ஒரே கல்லில் 11 வரிகள் கொண்ட கி.பி. 16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில் சகல குரு நாயனே, சகல குரு பாதமே, சகல விஷமும் தீரும் எங்கே விஷந்தீண்டினாலும் நன் என்ற வரி பொறிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டினை படியெடுத்து தமிழக தொல்லியல் துறையில் இருந்து ஒய்வு பெற்ற முனைவர் சொ.சாந்தலிங்கம் உதவியுடன் ஆய்வு செய்தபோது எங்கே விஷம் தீண்டினாலும் குருவோடு குருவின் பாதம் பணிந்தால் விஷத்தன்மை முற்றிலும் நீங்கி விடும். இக்கல்வெட்டினை வேறு பகுதியில் இருந்து எடுத்து வந்து பெரிய கண்மாய் கண் மடை கட்டப்பட்டு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe