December 6, 2025, 5:36 AM
24.9 C
Chennai

காலையில் வெளியே போயிட்டு வருவதற்குள்.. வீட்டை திறந்து கொள்ளை!

robbery
robbery

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் மனைவி கார்த்திகா(35) இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தவர் தற்பொழுது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்தநிலையில் கார்த்திகா மற்றும் அவரின் கணவர், பிள்ளை அனைவரும் நேற்று வீட்டை பூட்டிவிட்டு ஆதார் திருத்தம் செய்ய திருத்துறைப்பூண்டி தாலுக்கா ஆபீஸ் சென்றுவிட்டு நள்ளிரவு வீடு திரும்பியுள்ளனர். லேட்டாக வந்த அசதியால் அப்படியே தூங்கி விட்டனர்.

காலையில் கண்விழித்து பார்த்தபோது வீட்டின் கொல்லையில் இருந்த பாறை வீட்டிற்குள் இருந்ததை கண்டு மாடிக்கு சென்று பார்த்தபோது, அங்கு பீரோவை உடைத்து அதிலிருந்த 5 பவுன் காசு மாலை, 5 பவுன் மாங்கா மாலை, 2பவுன் தோடு ஜிமிக்கி, 1 பவுன் செயின், 1 பவுன் குழந்தைகளின் தோடு உட்பட மொத்தம் 15பவுன் நகை, ஒரு வெள்ளி டம்ளர், 50ஆயிரம் மதிப்புள்ள ஐ போன், 8ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

இதனையடுத்து கார்த்திகா முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். தகவல் அறிந்து அங்குவந்த முத்துப்பேட்டை டிஎஸ்பி வெள்ளத்துரை, இன்ஸ்பெக்டர் அழகேசன், மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இந்த திருட்டு சம்பவம் நேற்று பட்டபகலில் நடந்துள்ளது.

இதில் முன்பக்க கதவை பாறையால் நெம்பி உள்ளே சென்று திருடிவிட்டு அதேமாதிரி கதவை மூடி சென்றுள்ளனர். இதனை தெரியாமல் கார்த்திகா குடும்பத்தினர் நள்ளிரவில் வந்த அசதியில் அறியாமல் தூங்கியுள்ளனர் என்று தெரியவந்தது.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories