அக்.31 வரை மதம் சார் நிகழ்ச்சிகளுக்கு தடை! தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கவும் கட்டுப்பாடு!

dmk stalin - 2026

தமிழகத்தில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு வரும் அக்.31ஆம் தேதி வரை தடை நீ்ட்டிக்கப்படுவதாக மு.க.இச்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. இச்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் மற்றும் கோவிட் தொற்றின் மூன்றாம் அலையை தமிழகத்தில் தடுக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் 31 ம் தேதி வரையில் திருவிழா, அரசியல் சமூகம் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்துவற்கு தடை நீட்டிக்கப்படுகிறது.

  • பொதுமக்கள் பண்டிகைகளை தங்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும்.

பொது போக்குவரத்தை அவசியத்திற்காக மட்டுமே பொது மக்கள் பயன்படுத்த வேண்டும்.

கூட்டம் கூடும் இடங்களுக்கோ நிகழ்ச்சிகளுக்கோ பொதுமக்கள் செல்வதை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் கோவிட் மூன்றாம் அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மத்தியஅரசின் உள்துறை சார்பில் சிறப்பு குழு அறிக்கை அளித்து உள்ளது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

பள்ளி கல்லூரி வளாகங்களில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

மக்களின் வாழ்வாதாரம் , பொருளாதார நலன் கருத்தில் கொண்டு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகள் தொடரந்து செயல்படும்.இருப்பினும் திருவிழா, அரசியல் சமூகம் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்துவற்கு தடை நீட்டிக்கப்படுகிறது.

*கேரளாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கோவிட் தொற்று, நிபா வைரஸ் காரணமாக அம்மாநிலத்திற்கு பொது பேருந்து போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.

அறிக்கை முழு விவரம்

மாலை அணிவிக்க கட்டுப்பாடு

விடுதலைக்காக தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு மட்டுமே அனுமதி. அது மட்டுமல்லாது மரியாதை செய்யப்படும் தலைவர்களின் குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு மட்டுமே அனுமதி. வழங்கப்படுகிறது.

புகழ்பெற்ற அரசியல் கட்சி தலைவர்கள், ஐந்து நபர்களுக்கு மிகாமல் மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று மாலை அணிவிக்கலாம்.

கோவிட் மூன்றாவது அலையை தடுப்பதற்கு தடுப்பூசிபங்கு முக்கியமானது தமிழகத்தில் 45 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் , 12 சதவீதம் பேருக்கு 2 வது டோஸ் ஊசி போடப்பட்டுள்ளது.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories