அஞ்சல்… அண்ணாமலை… அஞ்சேல்..!

annamalai - 2026

இந்த பாஜக அண்ணாமலையார் முதல்வருக்கு அஞ்சல் அட்டை எழுதும் அறிவிப்பை செய்திருப்பது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என சொன்னோம்

இதற்கு ஆங்காங்கே கட்சி தலமை சொன்னதை கேட்காதவன் கட்சிக்காரன் அல்ல என சில குரல்கள் எம்மை கண்டித்து வருகின்றன‌

இவர்களின் அண்ணாமலை விசுவாசம் நல்லது, இதை திமுகவில் காட்டினால் 200 ரூபாய் கிடைக்கும் இங்கு அதெல்லாம் கிடைக்காது

முதலில் நாம் பாஜக கட்சி அல்ல, அங்கு வரும் விருப்பமோ ஆசையோ இல்லை. நாட்டுக்கு தேவையான காரியங்களை பாஜக செய்யும் பொழுது மகிழ்கின்றோம், 1950லே நேரு செய்ய வேண்டிய வேலையினை மோடி செய்யும் பொழுது அதை சுட்டி காட்டுகின்றோம் அவ்வளவுதான்

அண்ணாமலை மேல் எமக்கு ஒரு மரியாதை உண்டு, கட்டுபாடான காவல்துறை மற்றும் உயர்படிப்பு பெற்றவரும் ஊடகத்தாரின் எல்லா கேள்விக்கும் பதில் வைத்திருப்பவரும் சுருக்கமாக சொன்னால் மக்களிடையே ஒரு எதிர்பார்ப்பு பெற்றவரும் அவர்தான், தனிபட்டமுறையில் நாம் அவரை வாழ்த்துகின்றோம்

ஆனால் இந்த அஞ்சல் அட்டை அதுவும் 10 லட்சம் அஞ்சல் அட்டை அனுப்பினால் என்னாகும் என்றால் ஒன்றும் ஆகாது

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

துரைமுருகன் தன் பாணியில் பாஜகவின் மொத்த எண்ணிக்கையே 10 லட்சம்தான் என கலாய்ப்பார்

முக ஸ்டாலின் வழக்கம் போல் எட்டியே பார்க்கமாட்டார்

ஆனால் பதிலுக்கு பலகோடி பெரியார் பிறந்த நாள், அண்ணா நாள், கருணாநிதி டே, சமூக நீதி டே என வாழ்த்துக்கள் கோடி கணக்கில் கமலாயத்துக்கு வரும்

அதை அண்ணாமலையும் அவரின் கட்சியும் படித்து பார்க்க நேரமிருந்தால் படிக்கட்டும், ஆம் திமுக அப்படிபட்ட கட்சி, நேரு நான் சென்ன்ஸ் சொன்னதற்கே நோ சென்ஸ் என கடிதம் எழுதி அழிசாட்டியட்டியம் செய்தவர்கள்

அண்ணாமலை நேருக்கு நேர் ஸ்டாலினை சந்திக்கலாம், அனுமதி கோரலாம். ஸ்டாலின் மறுத்தாலும் சிக்குவார் அனுமதித்தால் ஒன்றும் கடித்து வைத்துவிட மாட்டார்

அப்படி செய்யும்பட்சத்தில் அண்ணாமலைக்கு இன்னும் மக்களிடம் வரவேற்பு கூடும், முதல்வரிடம் என்ன கோரிக்கை வைத்தேன் என விளக்கினால் இன்னும் நற்தோற்றம் ஏற்படும்

நாம் அதைத்தான் சொன்னோம்

டெல்லி அரசியலை விட தமிழக அரசியல் வித்தியாசமான களம், இங்கே ஒருமாதிரி ஆட வேண்டும், அரசுக்கு நெருக்கடியினை பல வழிகளில் கொடுத்து கொண்டே இருக்கவேண்டும், தேனி போல் கொட்டி கொண்டே இருக்க வேண்டும்

ALSO READ:  முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அதைத்தான் சொன்னோமே தவிர மற்றபடி கமலாயத்துக்கோ எமக்கோ சம்பந்தமில்லை, அது வேண்டாம்

காரணம் இதே பாஜக நாளை சொதப்பினால் அதை கண்டிக்க நாம் தயாராக இருத்தல் வேண்டும் அதுதான் தேசபக்தி

அது அவர்கள் கட்சி நாம் ஏதும் உத்தரவோ ஆலோசனையோ சொல்லமுடியாது, நாம் அண்ணாமலை ஒரு வளரும் தலைவர் எனும் வகையில் நம் கருத்தை சொன்னோம்

சரி, அவர்கள் அஞ்சல் அட்டை அனுப்பட்டும்

பதிலுக்கு கோடான கோடி அட்டைகளை திமுக அனுப்பும் அல்லது வேறுவகையில் வம்பிழுக்கும்

ஒன்றை மட்டும் யாரும் புரிந்து கொள்ள மறுக்கின்றார்கள்

திமுக அரசு தோல்வியின் உச்சத்தில் இருக்கின்றது, திகைத்து நிற்கின்றது, ஒரு உள்ளாட்சி தேர்தலை கூட நடத்தமுடியா அளவு அஞ்சுகின்றது

ஜக்கி மீதான தாக்குதலில் இருந்து பின் வாங்கியதில் இருந்து போதகர்கள் கைது வரை அதன் அச்சம் தெரிகின்றது

இப்பொழுது அவர்கள் பிரச்சினையினை மடைமாற்றம் செய்கின்றார்கள், தங்கள் தோல்வியினை மறைக்க மக்களை வேறு வகையில் திருப்புகின்றார்கள்

அர்ச்சகர் முதல் பெரியார் சிலை, சமூக நீதி டே, சதுர்த்திக்கு தடை என அவர்கள் மாற்றிவிடுவதெல்லாம் வேறு களத்தில் சண்டையிடுங்கள் எனும் தந்திர அரசியல்

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

அண்ணாமலை இதில் சிக்க கூடாது, நேரடியாக ஸ்டாலினை சந்தித்து இரண்டில் ஒன்றை கேட்டுவிட்டு நீதிமன்றமோ இதர நடவடிக்கைகளையோ மேற்கொள்ளலாம்

அதுதான் நல்லது அவசியமனது கூட‌

மாறாக அவர்கள் இப்படி புறவாசல் சண்டைக்கு இழுத்து அதிலே காலமெல்லாம் சண்டையிட பாஜகவினர் தயார் என்றால் அதை செய்யட்டும்

நாம் யாருக்கும் ஆதரவும் அல்ல எதிரியும் அல்ல, தேசமும் இத்தேசத்தின் கலாச்சார இந்துமதமும் நமக்கு முக்கியமானவை அதை யார் காக்க முன்வந்தாலும் நாம் ஆதரித்து கொண்டே இருப்போம்்

  • ஸ்டான்லி ராஜன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories