முதல் திருமணத்தை மறைத்து கட்டிக் கொடுத்த மாமனார் ஜாபர் ராஜாமுகமது.. இளைஞர் தற்கொலை முயற்சி!

Published:

thirumankalam
thirumankalam

மதுரை அடுத்த திருமங்கலம் மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அடுத்த கரிசல் பட்டியை சேர்ந்த பாலமுருகன் சமத்துவ புரத்தைச் சேர்ந்த ஜாபர் ராஜாமுகமது மகளை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

திருமணத்திற்குப் பின்னர் தனது மனைவிக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பதும் நான்காண்டுகளுக்கு முன்னர் வேறொருவருடன் திருமணம் செய்துகொண்டு அவர் வாழ்ந்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பாலமுருகன், முதல் திருமணத்தை மறைத்து ஏன் திருமணம் செய்து கொடுத்தீர்கள் என்று மாமனாரிடம் சண்டை போட்டிருக்கிறார்.

இந்த சண்டையில், இதைப் பற்றி எதுவும் பேசினால் கொலை செய்து விடுவேன் என்று ஜாபர் ராஜாமுகமது மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மேலும் மனமுடைந்த பாலமுருகன் தற்கொலை முடிவுக்கு சென்றிருக்கிறார்.

நேற்று மாலையில் கன்னியாகுமரியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார். இதை பார்த்துவிட்டு சிலர் ஓடி வந்து பாலமுருகனை பிடித்துக்கொண்டு, திருமங்கலம் போலீசார் வரவழைக்கப்பட்டு அவரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில் தனக்கு நேர்ந்தை சொல்லி மாமனாரின் மிரட்டலையும் சொல்லி அழுதிருக்கிறார். இதையடுத்து ஜாபர் ராஜாமுகமதுவை அழைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img