தனி வட்டாட்சியரைத் தாக்கிய திமுக நிர்வாகி கைது!

Office
Office

மணப்பாறையில் தனி வட்டாட்சியரை தாக்கிய நகர திமுக பொருளாளரை போலீஸார் நேற்று கைதுசெய்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை எடத்தெருவைச் சேர்ந்தவர் கோபி(52).
நகர திமுக பொருளாளரான இவர், நேற்று முன்தினம் மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று, நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் பாத்திமா சகாயராஜை சந்தித்து, நில ஆவணம் ஒன்றைக் கொடுத்து பட்டாதாரர் பெயர் விவரம் கேட்டுள்ளார்.

அதற்கு தனி வட்டாட்சியர், ‘முறையாக மனு அளித்தால்தான் விவரம் தெரிவிக்க முடியும்’ எனக் கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபி வட்டாட்சியர் பாத்திமா சகாயராஜை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த பாத்திமா சகாயராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கோபி மீது 294 பி, 323, 353 ஆகிய3 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர்அவரை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையே, தனி வட்டாட்சியர் தன்னைத் தாக்கியதாகக் கூறி மணப்பாறையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கோபி சிகிச்சைக்குச் சேர்ந்தார்

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

இதையடுத்து, மணப்பாறை மாஜிஸ்திரேட் கருப்பசாமி நேற்று முன்தினம் இரவு அந்த மருத்துவமனைக்கு சென்று கோபியிடமும், போலீஸாரிடமும் விசாரித்தார்.

அதன்பின் கோபியை வரும் 17-ம் தேதி வரைநீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். எனினும் சிகிச்சை பெற்று வந்ததால், கோபி தொடர்ந்து தனியார் மருத்துவமனையிலேயே இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணப்பாறையிலுள்ள அரசுப் பணியாளர்கள் நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோபியை உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து எஸ்.பி (பொ) பெரோஸ்கான் அப்துல்லா, மணப்பாறையிலுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று கோபியின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது சிறைக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு கோபியின் உடல்நலம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு, அவரை துறையூர் கிளை சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories