December 6, 2025, 7:53 AM
23.8 C
Chennai

தனி வட்டாட்சியரைத் தாக்கிய திமுக நிர்வாகி கைது!

Office
Office

மணப்பாறையில் தனி வட்டாட்சியரை தாக்கிய நகர திமுக பொருளாளரை போலீஸார் நேற்று கைதுசெய்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை எடத்தெருவைச் சேர்ந்தவர் கோபி(52).
நகர திமுக பொருளாளரான இவர், நேற்று முன்தினம் மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று, நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் பாத்திமா சகாயராஜை சந்தித்து, நில ஆவணம் ஒன்றைக் கொடுத்து பட்டாதாரர் பெயர் விவரம் கேட்டுள்ளார்.

அதற்கு தனி வட்டாட்சியர், ‘முறையாக மனு அளித்தால்தான் விவரம் தெரிவிக்க முடியும்’ எனக் கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபி வட்டாட்சியர் பாத்திமா சகாயராஜை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த பாத்திமா சகாயராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கோபி மீது 294 பி, 323, 353 ஆகிய3 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர்அவரை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையே, தனி வட்டாட்சியர் தன்னைத் தாக்கியதாகக் கூறி மணப்பாறையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கோபி சிகிச்சைக்குச் சேர்ந்தார்

இதையடுத்து, மணப்பாறை மாஜிஸ்திரேட் கருப்பசாமி நேற்று முன்தினம் இரவு அந்த மருத்துவமனைக்கு சென்று கோபியிடமும், போலீஸாரிடமும் விசாரித்தார்.

அதன்பின் கோபியை வரும் 17-ம் தேதி வரைநீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். எனினும் சிகிச்சை பெற்று வந்ததால், கோபி தொடர்ந்து தனியார் மருத்துவமனையிலேயே இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணப்பாறையிலுள்ள அரசுப் பணியாளர்கள் நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோபியை உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து எஸ்.பி (பொ) பெரோஸ்கான் அப்துல்லா, மணப்பாறையிலுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று கோபியின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது சிறைக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு கோபியின் உடல்நலம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு, அவரை துறையூர் கிளை சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories