தவறாக போட்ட தடுப்பூசி! உயிரிழந்த குழந்தை.. உறவினர்கள் போராட்டம்!

baby injection
baby injection

நாகர்கோவில் வடசேரியில் அரசு நகர்புற ஆரம்ப சுகாதர நிலைய செவலியர்கள் தவறான முறையில் தடுப்பூசி செலுத்தியதால் இரண்டரைமாத ஆண் குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி காட்டுநாயகன் தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 32). இவருடைய மனைவி ஆறுமுககனி (வயது 21). இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு வயதில் ஒரு குழந்தை உண்டு.

இந்த நிலையில் ஆறுமுககனிக்கு கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பெற்றோர் நல்லபடியாக கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் குழந்தைக்கு கடந்த 8-ந் தேதி ஓட்டுபுரை தெருவில் அரசு பள்ளியில் குழந்தைகளுக்காக நடைபெற்ற தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

அதற்கு பின்னர் குழந்தையின் உடலில் சோர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தை கடந்த 11-ந் தேதி கால் வீக்கம் எடுத்து திடீரென இறந்துவிட்டது.

குழந்தையின் மூக்கு வழியாக ரத்தம் வழிந்து இறந்ததாக கூறபடுகிறது. இது குறித்து சம்பந்தபட்ட அரசு செவலியர்களிடம் கேட்டதற்கு சரியான பதில் எதுவும் கூறவில்லை என குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுபற்றி குழந்தையின் பெற்றோர் கூறுகையில், ”நாங்கள் ஓட்டுபுரை தெருவில் உள்ள சத்துணவு கூடத்தில் வைத்து எங்கள் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தினோம். ஐந்து டோஸ் மருந்தை மூன்று டோஸில் போட்டனர். கையில் ஒரு ஊசியும், இரண்டு தொடையில் இரண்டு ஊசியும் போட்டனர். அதன்பிறகு குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுவிட்டது.

தவறான தடுப்பூசி செலுத்தியதால் குழந்தை இறந்ததாக சந்தேகிக்கிறோம். எங்கள் குழந்தைக்கு நடந்தது போல வேறு எந்த குழந்தைக்கும் நடக்ககூடாது. எனவே இதுதொடர்பாக வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்” என்றனர்.

அரசு நகர்புற ஆரம்ப சுகாதர நிலைய செவலியர்கள் தவறான முறையில் தடுப்பூசி செலுத்தியதால் இரண்டரைமாத ஆண் குழந்தை மரணமடைந்தது என்று பெற்றோர் குற்றம்சாட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories