60% : 40% ஆக மதிப்பெண்கள்! அண்ணா பல்கலைக்கழகம்!

anna university
anna university

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகள், தன்னாட்சி கல்லூரிகள், பல்கலைக்கழகத் துறைகள் உட்பட அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் செமஸ்டர் தேர்விலும் அகமதிப்பீடு தேர்விலும் (துறை அளவிலான தேர்வுகள் ஒரே மாதிரியாக 60%: 40% மதிப்பெண் அமைக்க அண்ணா பல்கலைக்கழகம் முன்மொழிந்துள்ளது.

எழுத்துத் தேர்வு மற்றும் அகமதிப்பீடு தேர்வுகள் இரண்டும் தலா 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

இப்போது, அண்ணா பல்கலைக்கழகம் எழுத்துத் தேர்வுகளில் விண்ணப்பதாரரின் மதிப்பெண்ணை 60 மதிப்பெண்களாகவும், அகமதிப்பீடு மதிப்பெண் 40 மதிப்பெண்களாகவும் மாற்றப்படும் என்று பரிந்துரைத்துள்ளது.

எழுத்துத் தேர்வு மற்றும் அகமதிப்பீடு தேர்வுகள் இரண்டுமே பாடத்தில் விண்ணப்பதாரரின் இறுதி மதிப்பெண்ணாக இருக்கும்.

தற்போது, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் ஒரு பாடத்தில் 80% : 20% மதிப்பெண் முறையில், எழுத்து தேர்வு மற்றும் அகமதிப்பீடு மதிப்பெண்கள் என அமைந்துள்ளன.

அதே நேரத்தில் தன்னாட்சி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக துறைகள் 60%: 40% மற்றும் செமஸ்டர் தேர்வுகளுக்கு 50% மதிப்பெண் மற்றும் அகமதிப்பீடு தேர்வுகளுக்கு 50% என மதிப்பெண் அமைக்கப்பட்டது.

கடந்த வாரம் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழகம் கல்விக் கவுன்சில் கூட்டத்தில் முன்மொழியப்பட்டபடி, அனைத்து பொறியியல் படிப்புகளிலும் எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை தாள்களுக்கு 60%: 40% வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

எழுத்து மற்றும் செய்முறை தேர்வுகளைக் கொண்ட தாள்களில் புறத் தேர்வி மற்றும் அகமதிப்பீடு தேர்வுகளுக்கு 50%: 50% மதிப்பெண் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருப்பதை காரணம் காட்டி, தமிழகத்தில் உள்ள சுயநிதி தொழில் நுட்ப கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு அனைத்து கல்லூரிகளுக்கும் புறத் தேர்வு மற்றும் அகமதிப்பீடு தேர்வுகளுக்கு ஒரே மாதிரியான மதிப்பெண் வெயிட்டேஜை பின்பற்றுமாறு மாநில அரசுக்கு மனு அளித்துள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் ஊடகங்களில் கூறுகையில், ​​அனைத்து கல்லூரிகளுக்கும் சீரான விகிதம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றார்.

அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், தனியார் கல்லூரிகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மட்டுமே இந்த திட்டம் உதவும் என்றும், மேலும், அவர்களின் மாணவர் சேர்க்கைக்கு உதவும் என்றும் தெரிவித்தனர்.

‘தரத்தை மேம்படுத்த பல்கலைக்கழகம் தொடர்ச்சியான மதிப்பீடு மற்றும் செமஸ்டர் தேர்வுகளை வலுப்படுத்த வேண்டும். வெயிட்டேஜ் சீரான தரத்தை மேம்படுத்தும் திசையில் சரியான நடவடிக்கை அல்ல’ என்று ஒரு தன்னாட்சி கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த கல்விக் கவுன்சில் கூட்டத்தில் 2021-22 முதல் 400க்கும் மேற்பட்ட இணை கல்லூரிகளுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த பல்கலைக்கழகம் முன்மொழிந்தது.

புதிய விதிமுறைகளின் கீழ், BE/BTech பட்டப்படிப்பு AICTE மாதிரி பாடத்திட்டத்தின்படி 185 கிரிடிட்ஸ்களில் இருந்து 160 கிரிடிட்ஸ்களாக குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories