ஐபோன் 13 ப்ரோ மாடல் 15 வினாடியில் ஹேக்.. 3 லட்சம் டாலர் பரிசு வாங்கிய ஹேக்கர்கள்!

hackers
hackers

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 ப்ரோ மாடல் மொபைல் போன், ஒரு வினாடியில் ஹேக் செய்யப்பட்டு “சாதனை ” படைக்கப்பட்டுள்ளது

தனியுரிமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பாதுகாப்பு இருக்குமென்று ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு ஒரு பெயர் உள்ளது. எனவே தான் பிரபலங்கள் ஐபோன் பயன்படுத்துவது வழக்கம்.

ஆனால் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப எத்தனை தொழில் நுட்பங்கள் வந்தாலும் அதையும் திருட்டு வேலை செய்வதற்கு ஹேக்கர்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்படித்தான் சீன நாட்டில் சேர்ந்த ஹேக்கர்கள் பங்கேற்ற ஒரு போட்டி செங்டு நகரில் வைத்து நடைபெற்றுள்ளது. அதில் ஹேக்கர்கள் தங்கள் திருட்டு திறமையை காண்பித்துள்ளனர்.

ஐஓஎஸ் 15.0.2 சாப்ட்வேர் மூலமாக செயல்படக்கூடிய சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 ப்ரோ வகை மாடல் போனை வெறும் ஒரு வினாடிகளுக்குள் ஹேக் செய்துள்ளனர் ஹேக்கர்கள். ஐபோன் மொபைல் போனிலேயே இதுதான் லேட்டஸ்ட் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

டியான்ஃபு கோப்பை என்ற பெயரில் இது போல ஹேக்கர்கள் பங்கேற்கும் போட்டிக்கு சீனாவில் ஏற்பாடு செய்யப்பட்டு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களின் உபகரணங்களை இந்த நிகழ்ச்சியின்போது ஹேக்கர்கள் ஹேக் செய்து தங்கள் திறமையை வெளிக்காட்டினார்கள்.

குன்லுன் டீம், ஐபோன் 13 ப்ரோ வகை செல்போனை நேரலையில் மேடையில் வைத்து 15 வினாடிகளுக்குள் ஹேக் செய்து காட்டியுள்ளது. ஐபோனில் உள்ள சபாரி வெப் பிரவுசர் ரிமோட் என்ற தொழில்நுட்பத்தின் மூலமாக இவ்வாறு லாக் செய்யப்பட்ட செல்போனுக்குள் புகுந்து தங்கள் கைவரிசையை காட்டி உள்ளது இந்தக் குழு.

இதேபோன்று, டீம் பங்கு என்ற அணி, ஐஓஎஸ் 15 சாப்ட்வேர் மூலமாக செயல்படும் ஐபோன் 13 ப்ரோ போனை, தொலைதூரத்திலிருந்து ஹேக் செய்து முதல் பரிசான 3 லட்சம் அமெரிக்க டாலர்களை வென்றுள்ளன.

ஏனென்றால் முதலில் ஹேக் செய்தவர்கள் 15 வினாடிகள் எடுத்துக் கொண்டனர் ஆனால் இந்த குழு வெறும் ஒரு வினாடியில் அதை செய்துள்ளது.

நம்பர்களை தாண்டி, பச்சை மற்றும் சிவப்பு ஆகிய பட்டன்களை மட்டுமே பயன்படுத்த தேவையுள்ள நமது பழைய நோக்கியா மாடல் போன்களை வைத்துக் கொள்வது தான் உங்களது ரகசியங்களை பாதுகாக்க இந்த உலகத்தில் ஒரே வழி போல.

எப்போது இணைய தளம் என்ற ஒன்று உங்கள் செல்போனில் இருக்கிறதோ அப்போது முதல் உங்களது சொந்த தகவல்கள் ஆபத்தில் இருக்கின்றன என்று அர்த்தம்.

இணையதள பண பரிமாற்றங்கள் எப்போதுமே ஆபத்தானவை என்பதற்கு இந்த சம்பவம் போன்றவை ஒரு எச்சரிக்கை மணியாக தான் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories