மூஞ்சில்கரடு மலைப்பகுதியில் உள்ள ராட்சத பாறையை ஒன்று உருண்டு கீழே விழும் சூழலில் இருப்பதால் அதனை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மூஞ்சில்கரடு என்ற மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் மழையின் அடிவாரத்தில் விவசாயிகள் தக்காளி, நிலக்கடலை, மிளகாய், பீன்ஸ் போன்ற பயிர்களை பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர்.
இதனையடுத்து கடந்த சில மாதங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும் சேதமடைந்துள்ளது. இதனைதொடர்ந்து மூஞ்சில்கரடு மலைபகுதியில் உள்ள ராட்சத பாறை ஒன்று உருண்டு மண்ணில் சிக்கிக்கொண்டு பாறை தொங்குவதுபோல் நிற்கிறது.
மேலும் அந்த பாறை கீழே விழுந்தால் பெரும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த ராட்சத பாறையை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.