வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் வரும் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் திருவாதிரை திருவிழா நடைபெறுகிறது.
இந்நிலையில் விழாவின் துவக்க நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, சிறப்பு தோற்றத்தில் அம்பாளுடன் எழுந்தருளிய கல்யாணசுந்தரருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதேபோன்று, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றாலநாதர் சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, குற்றாலநாதரின் அருளை பெற்றனர்.