ஓ சொல்றீயா.. உண்மையை உரக்கச் சொன்ன அல்லு அர்ஜூன்!

samantha - 2026

தற்போது மிகவும் பிரபலமான ‘ஓ சொல்றீயா..’ பாடலுக்கு ஆண்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து நடிகர் அல்லு அர்ஜூன் கலகலப்பாக பதில் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று ‘புஷ்பா’ படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய அல்லு அர்ஜூன், தான் தமிழ்நாட்டில் பிறந்து 20 வருடங்கள் இங்குதான் வாழ்ந்ததாகவும், நல்ல படத்தோடு இங்கு வர வேண்டும் என்பதற்காக இத்தனை வருடங்கள் காத்திருந்ததாகவும் கூறினார்.

தான் பேசும் தமிழ் தவறாக இருந்தாலும் தமிழில்தான் பேசுவேன் என்றும், அதுதான் அழகாக இருக்கும் என்றும் பேசினார். மேலும், சென்னையில் பிறந்தவன் தான் என்றும், தமிழ்நாட்டில் தன் படம் வெற்றி பெற்றால்தான் சாதித்தது போல் உணர்வேன் என்றும் கூறினார்.

கடைசியாக தெலுங்கு பேசுற தமிழ் பையன் என தன்னை தன் நண்பர்கள் அழைப்பார்கள் எனவும் கூறினார்.

மேலும், இந்தப்படம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்றும், செம்மரக்கடத்தல் குறித்து சுவாரஸ்யமாக படமாக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இதனிடையே, ‘ஓ சொல்றீயா..’ பாடல் குறித்து செய்தியாளர் ஒருவர் அல்லு அர்ஜூனிடம், இந்தப் பாட்டு மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது. அதேநேரத்தில் அந்தப் பாடலின் வரிகளுக்கு, ஆண்கள் எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள்.

நீங்களும் ஒரு ஆண் தான், நீங்க எப்படி ஃபீல் பண்றீங்கனு கேட்க, அப்படியே மைக்கை தேவி ஸ்ரீ பிரசாத்திடம் திருப்பும் அல்லு அர்ஜூன், ‘உண்மைதானே’ என்று சிரிப்புடன் கூற, அருகில் இருக்கும் அனைவரும் சிரித்தனர்.

இந்த பாடலில் உள்ள வரிகள் பெண்களின் உருவ கேலி, நிற கேலி உள்ளிட்டவை குறித்து பேசுவதாக இருக்கிறது. அத்துடன், ஆண்கள், பெண்கள் குறித்து என்னென்ன நினைக்கிறார்கள் என்பது போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைதராபாத்தில் ஆண்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான ‘புஷ்பா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் வரும் 17ஆம் தேதி வெளியாகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories