பொங்கலோ பொங்கல்: ஓட்டு வாங்க சொன்னத எல்லாம் உண்மைனு நம்பிக்கிட்டு.. போவியா… தில்லாலங்கடி திமுக!

DMk pongolo pongal - 2026

திசையன்விளை அருகே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுப் பணம் எங்கே எனக் கேள்வி எழுப்பி திமுக நிர்வாகிகளிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புத்தாண்டு பிறந்த கையோடு தமிழக மக்கள் நமது பாரம்பரிய பண்டிகையான பொங்கலைக் கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

ஜன.,14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.இதைத் தொடர்ந்து, மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கலும் அடுத்தடுத்து தமிழக மக்கள் கொண்டாடி மகிழ இருக்கின்றனர்.

தமிழக மக்கள் அனைவரும் இந்தப் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக, ஆண்டுதோறும் பொங்கல் சிறப்பு தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்போடு, பணப்பரிசையும் அதிமுக தலைமையிலான தமிழக அரசு வழங்கி வந்தது. குறிப்பாக, கடந்த ஆண்டு கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு ரூ.2,500 வழங்கப்பட்டது. எனவே, இந்த ஆண்டும் பொங்கல் பணப்பரிசை எதிர்நோக்கி மக்கள் காத்திருந்தனர்.

இந்த சூழலில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இது, ஏழை, எளிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. மேலும், பொங்கல் பரிசுத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதோடு, அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதம் அகவிலைப்படியை வழங்கிய தமிழக அரசு, கடந்த ஆட்சியைப் போன்று, ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகை வழங்க மறுப்பது ஏன்..? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதனிடையே, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, பிற பகுதிகளிலும், திமுகவினர் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ரேஷன் கடை ஒன்றில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுப் பணம் எங்கே எனக் கேள்வி எழுப்பி திமுக நிர்வாகிகளிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், முழு கரும்பு மற்றும் பச்சரிசி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை அப்பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர்.

அப்போது, பொங்கல் பரிசுத் தொகை எங்கே..? என்று அங்கிருந்த பெண்கள் கேள்வியை எழுப்பத் தொடங்கினர். இதனால், அதிர்ந்து போன திமுக நிர்வாகிகள், அங்கிருந்து லேசாக நழுவினர்.

அப்போது, ஒருவர் மட்டும் பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ‘அதுதான் ஓட்டுக்கு ரூ.2,000 கொடுத்தோம்ல.. அப்புறம் என்ன,’ என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பெண் ஒருவர், ‘ஒட்டுக்கு கொடுத்தது பத்தி பேசுல, ரேஷன் கடையில் ரூ.2,500 கொடுத்தாங்க, அதை ஏன் தரல,’ எனப் பதிலளித்ததோடு, கொடுத்த 21 பொருளாவது சரியா இருக்கா என்று செக் பண்ணி பாத்துக்கோங்க எனக் கூறினார்.

இதையடுத்து, பரிசுத் தொகுப்பை பெற்ற பெண் ஒருவர் 21 பொருட்களில் 18 தான் இருக்கிறது, என மற்றொரு பெண் கூறியது, அங்கிருந்த திமுக நிர்வாகிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர், அங்கிருந்தவர்களை சமாளித்து விட்டு, அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories