கனவில் வந்த அம்மன்.. கூற்றுப்படி பூமியில் இருந்து தோண்டி எடுத்த சிலை!

kaliamman - 2026

பூமிக்குள் வைக்கப்பட்ட நவதானிய காளியம்மன் சிலை 15 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சோலைஹால் மார்க்கெட் குமரன் தெருவில் 250 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நவதானியம், மூலிகை மற்றும் அத்திமரத்தூள் ஆகியவற்றால் செய்த காளியம்மன் சிலையை வழிபட்டு வந்துள்ளனர்.

இது நவதானியத்தால் உருவான சிலை என்பதால் அபிஷேகம் செய்ய இயலவில்லை. இதனால் சிலர் நவதானிய சிலையை கருவறைக்கு கீழே பூமிக்குள் புதைத்து விட்டனர். அதற்கு மேல் கல் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர்.

இந்நிலையில் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்தது.

இதற்கிடையில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு சிவனடியார் உள்பட 3 பேரின் கனவில் காளியம்மன் தோன்றி கருவறையில் பூமிக்குள் இருக்கும் தன்னை வெளியே எடுத்து வழிபடுமாறு கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அறிந்ததும் கோவில் நிர்வாகிகள் காளியம்மனிடம் பூ போட்டு குறி கேட்டுள்ளனர். அதில் உத்தரவு கிடைத்ததால் யாகம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தி 15 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்குள் வைத்த நவதானிய சிலையை பத்திரமாக வெளியே எடுத்தனர்.

இதனை அடுத்து சிதிலம் அடையாமல் அப்படியே இருந்த நவதானிய சிலையை பார்த்து பக்தர்கள் பரவசமடைந்து அம்மனை வழிபட்டுள்ளனர்.

இதுகுறித்து அறிந்ததும் சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் பழமையான காளியம்மன் சிலையை ஆர்வமுடன் வந்து பார்த்து வழிபட்டு செல்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Topics

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories