ஆயுஷ்மான் பாரத் கோல்ட் கார்டு ஒமிக்ரான் சிகிச்சைக்கு உதவுமா…?

Ayushman card - 2026

பொது மக்களுக்கு இலவச சுகாதார வசதிகளை வழங்குவதற்காக ஆயுஷ்மான் பாரத் கோல்ட் கார்டை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு கார்டுதாரருக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும். இந்த கார்டின் மூலம் ஏழைத் தொழிலாளர்களும் எளிதில் சிகிச்சை பெறலாம்.

இந்த கார்டின் கீழ் பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது, ​நாட்டை உலுக்கி வரும் ஒமிக்ரான் அதிவேகமாக பரவி வருகிறது.

அத்தகைய சூழ்நிலையில், இந்த கார்டு இல் Omicron சிகிச்சை இலவசமா? இல்லையா? என்ற கேள்வி உங்கள் மனதில் இருக்கலாம்.

ஒமிக்ரானுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் (Ayushman Bharat Card) கீழ், நாட்டின் 10 கோடி ஏழை, பிற்படுத்தப்பட்ட மற்றும் நலிந்த பிரிவினருக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.

இந்தக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு கிடைக்கும். இந்த கார்டின் கீழ் ஒமிக்ரானின் (Omicron Treatment) சிகிச்சையும் இலவசமாக செய்துக்கொள்ளலாம்.

இருப்பினும், இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, நீங்கள் சில தகுதிகளைப் பெற்றிருப்பதும் அவசியம். அவை என்ன என்பதை பார்போம்.

கிராமப்புறங்களில், குடிசை வீடு உள்ளவர்கள், குடும்பத்தில் வயது முதிர்ந்தவர்கள் (16-59 வயது) இல்லாதவர்கள், குடும்பத் தலைவர் ஒரு பெண், குடும்பத்தில் ஊனமுற்றோர் இருப்பவர்கள், குடும்பத்தில் SC / ST யைச் சேர்ந்தவர் அல்லது நபர் நிலமற்றவர் / தினசரி கூலித் தொழிலாளி, ஆதரவற்ற, தொண்டு அல்லது பழங்குடியினர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தின் பலனைப் பெற முடியும்.

ஆயுஷ்மான் பாரத் கோல்டன் கார்டை பெற இப்படி செய்யுங்கள்
முதலில், உங்களுக்கு அருகிலுள்ள பொது சேவை மையத்திற்குச் செல்லுங்கள்.

இங்கே மையத்தின் அதிகாரிகள் பட்டியலில் உங்கள் பெயரை சரிபார்ப்பார்கள்.

ஆயுஷ்மான் யோஜனா பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தால், உங்களுக்கு கோல்டன் கார்டு கிடைக்கும்.

ஆதார் அட்டை, பான் கார்டு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், ரேஷன் கார்டு புகைப்பட நகல், பாஸ் போர்ட் அளவு புகைப்படம் போன்ற உங்களின் அனைத்து முக்கிய ஆவணங்களையும் மைய அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

உங்கள் பதிவு ஜன் சேவா கேந்திரா அதிகாரியால் செய்யப்படும்.

பதிவு செய்த பிறகு, பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை அதிகாரிகள் தருவார்கள்.

பதிவு செய்த 15 நாட்களுக்குள் உங்கள் ஆயுஷ்மான் கோல்டன் கார்டு உங்களை வந்து சேரும்.

ஆயுஷ்மான் பாரத் கார்டை ஆன்லைனில் பதிவிறக்கவும்

நீங்களும் ஆயுஷ்மான் பாரத் கார்டைப் பதிவிறக்க விரும்பினால், இதற்கு https://pmjay.gov.in/ க்குச் செல்லவும்.

இப்போது உங்கள் மின்னஞ்சல் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கும், அதில் ஆதார் எண்ணை உள்ளிட்டு தொடரவும். அடுத்த பக்கத்தில் உங்கள் கட்டைவிரல் பதிவை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.

பின்னர் ‘அங்கீகரிக்கப்பட்ட பயனாளி’ என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

அதன் பின்னர் நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட தங்க அட்டைகளின் பட்டியலைக் காண்பீர்கள்.

இந்த பட்டியலில் உங்கள் பெயரைக் கண்டுபிடித்து, கன்ஃபார்ம் பிரிண்ட் ஆப்ஷன் ஐ கிளிக் செய்யவும்.

இப்போது நீங்கள் CSC வாலட்டைப் பார்ப்பீர்கள், அதில் உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

இப்போது பின்னை இங்கே உள்ளிட்டு முகப்புப் பக்கத்திற்கு வரவும்.

பதிவிறக்க அட்டையின் விருப்பம் கேண்டிடேட் பெயரில் தோன்றும்.

இங்கிருந்து உங்கள் ஆயுஷ்மான் கார்டை பதிவிறக்கம் செய்யலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories