December 6, 2025, 7:36 AM
23.8 C
Chennai

தீப்பெட்டிக்குள் பட்டு புடவை!

pattu saree - 2025

தெலுங்கானாவைச் சேர்ந்த இளம் கைத்தறி நெசவாளர், தீப்பெட்டியில் மடித்து வைக்கக் கூடிய சேலையை நெசவு செய்துள்ளார்.

இம்மாவட்டத்தில் உள்ள ராஜண்ணா சிர்சில்லா பகுதியைச் சேர்ந்த நல்லா விஜய் என்பவர் பட்டுப் புடவை நெய்துள்ளார். கையால் சேலை நெய்வதற்கு இரண்டு வாரங்கள் ஆகும், அதற்கு 12,000 ரூபாய் செலவாகும்.

இயந்திரங்களில் நெய்யப்பட்டால், மூன்று நாட்கள் ஆகும். இயந்திரத்தில் நெய்ய 8,000 ரூபாய் செலவாகும். மிக திறமையான நெசவாளரான தனது தந்தை நல்லா பரந்தமுலு அளித்த ஊக்கம் காரணமாக, மகனான நல்லா விஜய்யும் குடும்ப பாரம்பரியத்தை தொடர்கிறார். இவர் கைத்தறியில் சேலைகளை நெசவு செய்து வருகிறார்.

pattu - 2025

கையால் நெய்யப்பட்ட இந்த புடவையை பார்த்து அமைச்சர்கள் ஆச்சரியமடைந்தனர்
விஜய், மாநில அமைச்சர்கள் கே. தாரக ராமராவ், பி.சபிதா இந்திராரெட்டி, வி.சீனிவாச கவுட் மற்றும் எரபெலி தயாகர் ராவ் ஆகியோர் கையால் நெய்த அந்த புடவைகளை காட்சிப்படுத்தினர்.

அனைத்து அமைச்சர்களும் திறமையான இளம் நெசவாளரைப் பாராட்டி, பயன்படுத்திய பொருள் மற்றும் நெசவு செயல்முறை குறித்து கேட்டறிந்தனர்.

தீப்பேட்டியில் மடித்து வைக்கக் கூடிய புடவை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், முதல் முறையாக நேரில் பார்க்கிறேன் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.

நெசவாளரின் கண்டுபிடிப்புகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கப்படும் என அமைச்சர்கள் உறுதியளித்தார். சபீதா இந்திராரெட்டிக்கு விஜய் சேலை பரிசளித்தார்.

மேலும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவிக்கு புடவை பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர்களிடம் நெசவாளர் கூறியதாவது:

மாநில அரசின் உதவியால் சிர்சில்லாவில் கைத்தறி துறை சமீப காலமாக பல மாற்றங்களை கண்டுள்ளது. சிர்சில்லாவில் உள்ள நெசவாளர்கள் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன உபகரணங்களை பயன்படுத்துகின்றனர் என்றார்.

pattu saree1 - 2025

விஜய் நெய்த புடவை முதன்முதலில் 2017 உலக தெலுங்கு மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது. 2015-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்திருந்த போது, ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவுக்கு இந்த சூப்பர் ஃபைன் பட்டுப் புடவையை பரிசாக வழங்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories