December 6, 2025, 8:24 AM
23.8 C
Chennai

ஸ்டெம்ப் மைக்கில் பேசிய கோலி! வலுக்கும் கண்டனங்கள்!

Virat Kohli - 2025

கேப்டவுனில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கருக்கு அளிக்கப்பட்ட அவுட்டை டி.ஆர்.எஸ். மூலம் திரும்ப பெற்றதால் கடுப்பான கேப்டன் கோலி, ஸ்டம்பில் பொருத்திய மைக்கில் பேசியதற்கு முன்னாள் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோலி மைக்கில் உங்கள் அணியிலும் கவனம் செலுத்துங்கள், எதிரணியினரை மட்டும் பிடிப்பதில் கவனம் செலுத்தாதீர்கள் என்று கூறினார்.

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் மோர்னே மோர்கல் விராட்கோலியின் செயலுக்கு, ‘நீங்கள் தொடரை வெல்ல வேண்டும் என்று நினைத்தால் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானது.

ஏராளமான இளைஞர்கள் இந்த தொடரை பார்க்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும்’ என்று கோலிக்கு அறிவுரை கூறியுள்ளார்.

ஆகாஷ்சோப்ரா தெரிவித்துள்ள கருத்தில், நடுவர்கள் புனிதமானவர்கள். அவர்கள் ஒன்றும் ரெப்ரி அல்ல. இந்த ஒரு விளையாட்டில்தான் நடுவர்கள் உள்ளனர். உங்கள் எதிர்ப்பைக் கூற உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால், அது சரியான முறையா? நிறைய குழந்தைகள் இந்த விளையாட்டைப் பார்க்கிறார்கள்.’ என்று கூறியுள்ளார்.

கவுதம் கம்பீர் தெரிவித்துள்ள கருத்தில் கூறியிருப்பதாவது, ‘இது உண்மையில் மிகவும் மோசமான செயல். இது உண்மையில் முதிர்ச்சியற்ற செயல். ராகுல் டிராவிட் அவருடன் பேசுவார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ராகுல்டிராவிட் ஒருபோதும் இதுபோன்று நடந்து கொள்ள மாட்டார்’ என்று கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தில் உள்ள இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டி 212 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி ஆடி வருகிறது. தென்னாப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்சில் 101 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.

இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தின்போது தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கருக்கு அஸ்வின் பந்தில் எல்.பி.டபுள்யூ கேட்கப்பட்டது. உடனே டீன் எல்கர் மூன்றாவது அம்பயரிடம் ரிவியூ கேட்டார்.

ரிவியூவில் அஸ்வின் வீசிய பந்து ஸ்டம்பில் இருந்து விலகிச் செல்வது போல காட்டியது. மேலும், டீன் எல்கர் நாட் அவுட் என்று அளிக்கப்பட்டது. இதனால், இந்திய வீரர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனால், மிகவும் கடுப்பான இந்திய கேப்டன் விராட்கோலி ஸ்டம்பில் பொருத்தப்பட்டிருந்த மைக்கில் கூறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories