ரூ.2000 பந்தயம்: சாக்கடை நீரை பருகிய முதியவர்!

Published:

Sewer water - 2026

முதியவரிடம் ரூ.2000 பணம் கொடுக்கிறோம், சாக்கடை நீரை பருகுங்கள் என பந்தயம் கட்டவே, முதியவரும் பணத்திற்காக சாக்கடை நீரை குடித்த சோகம் நடந்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள விதிஷா, ஜாவதி கிராமத்தை சார்ந்த முதியவர் பன்னலால் (வயது 60). இவர் கடந்த ஜன. 13 ஆம் தேதி குஷுவாஹா பகுதியில் சென்றுகொண்டு இருக்கையில், வெற்றிலையை எடுத்து சாப்பிட முயற்சிக்கும் போது அது கீழே விழுந்துள்ளது.

கீழே விழுந்த வெற்றிலை சாக்கடை நீரில் விழுந்த நிலையில், அதனை எடுத்து அருகே இருந்த கிணற்று நீரில் கழுவிய முதியவர் சாப்பிட்டுள்ளார். இதனைகவனித்த இளைஞர்கள் மற்றும் சிலர், சாக்கடையில் விழுந்ததை ஏன் எடுத்து சாப்பிடுகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதுவும் சாதாரண நீர் தானே? வீட்டில் உபயோகித்து போக மீதி சாக்கடையாக வருகிறது என கூற, அதனைக்கேட்ட இளைஞர்கள் ரூ.2000 பந்தயம் கட்டுவோம், சாக்கடை நீரை குடிகிக்கிறீர்களா? என்று கேட்டுள்ளனர்.

சற்றும் யோசனை செய்யாத முதியவர், ரூ.2000 ஆயிரம் வேண்டும் என்று கூறியவாறு சாக்கடை நீரை எடுத்து கைகளில் அள்ளி பருகினார். இந்த நிகழ்வை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்யவே, அது வைரலாகி கண்டனத்தை பெற்று வருகிறது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Related articles

Recent articles

spot_img