ஆசிரியர்கள் கலந்தாய்வு: குளறுபடியால் குமுறும் ஆசிரியர்கள்!

Published:

transfer - 2026

நடப்பு கல்வியாண்டுக்கான தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இடம் மாறுதல் கவுன்சிலிங் நடவடிக்கைகள் 2021 டிசம்பர் 31ஆம் தேதி தொடங்கி கடந்த 12 ஆம் தேதி வரையிலும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் பதிவானது நடைபெற்றது.

இதையடுத்து நேற்று முன்தினம் பணி மூப்பு பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் அதில் 58 ஆயிரம் பேர் இடம் பிடித்துள்ளனர்.

பணி மூப்பில் ஆட்சேபனை இருபவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

அதன்பின் நேற்று இறுதி பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. இதனைதொடர்ந்து நாளை பணியிட மாறுதல் ஆன்லைன் மூலம் தொடங்க இருக்கிறது.

முதற்கட்டமாக மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு இட,ம் மாறுதல் அளிக்கப்படும். அதன்பின் படிப்படியாக ஒவ்வொரு பிரிவினருக்கும் இடமாறுதல் வழங்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில் பணிமூப்பு பட்டியலை பார்த்த ஆசிரியர்களில் சில பேர் தங்களது பணிமூப்பு வரிசை சரியாக இடம் பெறவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

குறைந்த வருடங்களில் ஒரே இடத்தில் பணி புரிந்தவர்கள் பல பேர் பணி மூப்பில் முன்னிலையில் இருப்பதாக கூறியுள்ளனர். இதனை சரிசெய்ய மனு அளித்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

இதனிடையில் ஓராண்டுக்கு குறைவாக ஒரே இடத்தில் பணியாற்றிய ஆசிரியர்களின் மனுக்களை, பள்ளிக் கல்வித்துறை நிராகரித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img