தவறவிட்ட நகைகள்: வாட்ஸ்அப் குழு மூலம் மீட்ட வியாபாரி!

gold 1 - 2026

சென்னையில் நகை செய்யும் வியாபாரி தொலைத்து விட்ட நகைகளை, வாட்ஸ்அப் குரூப் மூலம் மீட்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை வேப்பேரியைச் சேர்ந்தவர் மஹிபால். நகை செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 17ஆம் தேதி வேப்பேரியில் உள்ள தன் வீட்டிலிருந்து 365 கிராம் நகையை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஆட்டோவில் ஈ.வி.கே சம்பத் சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த போது நகைகள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தொலைந்து போன நகைகளை மீட்பதற்கு மஹிபால் சாதுரியமான முயற்சியும் மேற்கொண்டுள்ளார்.

தொலைந்து போன நகைகளை எடுப்பவர்கள், நகைக்கடை அல்லது நகை அடகு கடையில் தான் விற்க முற்படுவார்கள் என்ற அடிப்படையில், சென்னையில் உள்ள நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வியாபாரிகள் சங்கத்தை அணுகி அதன் வாட்ஸ்அப் குரூப் மூலம் தொலைந்து போன நகைகள் குறித்த தகவல்களை புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்.

யாரேனும் இந்த வடிவமைப்பிலான நகைகளை விற்க வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் குறிப்பிட்டுள்ளார்

ALSO READ:  5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

இந்நிலையில்தான் நேற்று புரசைவாக்கம் சண்முக ராயர் தெருவில் உள்ள தனியார் நகை அடகு கடை ஒன்றில் ரமேஷ் என்பவர் நகைகளை விற்பனை செய்ய வந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த நகை வாட்ஸ்அப் குரூப்பில் காணாமல் போனதாக போடப்பட்ட நகை என்பதை அறிந்த, நகை அடகுக் கடைக்காரர் உடனடியாக மஹிபாலுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மஹிபால் பெரியமேடு காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து புரசைவாக்கத்தில் உள்ள அந்த நகை அடகு கடைக்கு சென்று நகையை விற்க வந்த ரமேஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தன் நண்பர் ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ் கொடுத்த தங்க நகை என தெரிவித்துள்ளார். இதையடுத்து வெங்கடேஷ் அவரது மனைவி சங்கீதா ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், தன் மாமா ஜோதி என்பவர் மூலம் தன் தாய் கலா கொடுத்த நகைகள் என தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து ஜோதி என்பவரை விசாரணை செய்த போது தான், கடந்த 17ஆம் தேதி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள பழமுதிர்ச்சோலை அருகே சாலையில் கேட்பாரற்று தங்கநகைகள் கிடந்ததாகவும், அதில் சுமார் 365 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளை தன் சகோதரி மற்றும் சகோதரியின் மகள் குடும்பத்திற்கு பிரித்துக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

இதனையடுத்து போலீசார் அவர்களிடம் உள்ள 365 கிராம் நகை அனைத்தையும் மீட்டுள்ளனர். சாலையில் கிடந்த நகைகளை போலீசாரிடம் ஒப்படைக்காமல் அபகரிக்க முயன்ற நான்கு பேரையும் பெரியமேடு போலீசார் காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்வதிலும் ஜோதி என்பவர் தான் சாலையில் கிடந்த நகைகளை எடுத்துச் என்பதும் உறுதியானது.

சுமார் 50 சவரன் நகைகளை சாலையில் தவறவிட்ட உடன் பதட்டப்படாமல், சாதுர்யமாக அந்த நகைகளின் புகைப்படங்களை நகை அடகு கடை வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்து தேட முயற்சி செய்ததன் மூலம், ஒரே வாரத்தில் காணாமல் போன நகையை மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

போலீசார் விசாரணை முடிந்து நாளை நகைகளை மஹிபாலிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சாலையில் கிடந்த நகைகளை போலீசாரிடம் ஒப்படைக்காமல் சொந்தமாக்க முயன்ற நபர்களை உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ALSO READ:  பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories