December 5, 2025, 4:50 PM
27.9 C
Chennai

மாணவி மரணத்தில் உண்மை வெளிவர சிபிஐ., விசாரணை தேவை: அண்ணாமலை வலியுறுத்தல்!

annamalai ariyalur interview - 2025

மதமாற்ற விவகாரத்தில் கடும் அழுத்தம் காரணமாக பள்ளி விடுதியில் தங்கியிருந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், சிபிஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தற்கொலை செய்துகொண்ட மாணவியின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள வடுகபாளையம் கிராமத்தில் பாஜக., மாநில தலைவர் கே.அண்ணாமலை, பாஜக., தேசிய மாநில மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக., தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன் மாணவியின் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து அஞ்சலி செய்தனர்.

பின்னர், மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மாணவியின் பெற்றோரிடம், ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை இது குறித்துக் கூறிய போது, மாணவியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை பாஜக., போராடும். பாஜக., குழு நாளை மறுநாள் அரியலூர் வர உள்ளது. பாஜக., சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டது. மாணவியின் குடும்பத்திற்க்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டும்.

இந்தப் போராட்டம் எந்த மதத்திற்கு எதிரான போராட்டமும் இல்லை. மாணவிக்கு நீதி கேட்கும் போராட்டம். இதில் மனிதர்கள் தவறு செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து உண்மை வெளிவர சிபிஐ., விசாரணை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

annamalai at ariyalur - 2025

மாணவியின் வீடியோவை அடிப்படையாக வைத்து பாஜக., கட்சி தன்னுடைய குரலை கொடுத்து வருகின்றது. மாணவியின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து பாஜக., போராடுகிறது.

ஆட்சியாளர்கள், பொறுப்பில் இருப்பவர்கள், பொறுப்பில்லாமல் பேசுவது நீதி கிடைக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறக்கும் தருவாயில் எந்த ஒரு குழந்தையும் பொய் சொல்ல வாய்ப்பில்லை. ஒரு மதத்தைச் சேர்ந்த இரண்டு மனிதர்கள் செய்த தவறு தான் இது.

இதில் புலனாய்வு துறையினர் தவறான அறிக்கையை முதல்வருக்கு தெரிவித்துள்ளனர். தமிழக அரசும் மோசமாகக் கையாண்டுள்ளது. அற்புதமான காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடுங்கள் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories